தாய் தந்தையை பிரிந்து பெரியம்மாவுடன் வாழ்ந்து வந்த மகள்; முறையிலான 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ச்சியாக உட்படுத்திய பெரியதந்தையை வல்வெட்டித்துறை பொலிஸார், புதன்கிழமை (04) கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாய் தந்தையை சிறுவயதில் இருந்து பிரிந்து வாழும் மேற்படி சிறுமியை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பெரியதந்தை, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

பெரிய தாய், கடற்கரையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட சென்ற சமயங்களில் பெரியதந்தை மேற்படி சிறுமியினை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி, பெரியதாயின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, 51 வயதுடைய பெரியதந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

அதனையடுத்து, சந்தேகநபரை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் மேலும் கூறினர்.

Share.
Leave A Reply