இந்தோனேஷியா விமானம் நடுவானில் திடீரென நிலைதடுமாறியதால் அதில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நேற்று (புதன்கிழமை) எதிகேட் நிறுவனத்திற்கு சொந்தமான EY474 என்ற விமானம் அபுதாபியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்தோனேஷியா கிளம்பியது.

அப்போது நடுவானில், வானிலையில் ஏற்பட்ட மாற்றம் (turbulence) காரணமாக விமானம் குலுங்க தொடங்கியது. இந்த அதிர்வு 45 நிமிடங்களுக்கு மேலாக இருந்ததால் அதில் இருந்த பயணிகள் அனைவரும் அலற தொடங்கினர்.

இருப்பினும் விமானம் இந்தோனேஷிய தலைநகர் ஜகர்ட்டாவில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் காயம் கடைந்த 9 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 22 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, விமானத்தின் சில பாகங்களும் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜகர்ட்டாவில் இருந்து அபுதாபி செல்லவிருந்த EY475 விமானம் ரத்து செய்யப்பட்டது.

Share.
Leave A Reply