‘ஒரு­போதும் யாரி­ட­மி­ருந்தும் தொலை­பே­சியில் கூட அச்­சு­றுத்தல் வராத எனக்கு என்ன நடந்­தது என்­பதை ஊகித்­துக்­கொள்ள முடி­யா­துள்­ளது. என் மனைவி தம்­மிகா மட்டும் இல்­லாமல் இருந்­தி­ருந்தால் வாக­னத்­துக்­குள்­ளேயே என்னை கொலை செய்­தி­ருப்­பார்கள்’

இது கடந்த 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 23 ஆம் திகதி , கம்­பஹா மாவட்­டத்தின் வெலி­வே­ரிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இம்­புல்­கொட பஹல யாகொட வீதியில் தனது மனை­வி­யுடன் காரில் பய­ணித்த போது அதி­காலை வேளையில் கடும் தாக்­கு­த­லுக்கு உள்­ளான ரிவிர, திவ­யின பத்­தி­ரி­கை­களின் முன்னாள் ஆசி­ரியர் உபாலி தென்­னக்கோன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் சிகிச்­சை அறைக் கட்­டிலில் வைத்து தன்னைப் பார்க்க வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கூறிய விட­யங்­களே அவை.

அன்று, அதா­வது 2009 ஜன­வரி 23 ஆம் திகதி அதி­கலை 6.40 மணி­யி­ருக்கும். வீட்­டி­லி­ருந்து தனது காரில் மனை­வி­யுடன் அலுவல் ஒன்றின் நிமித்தம் வெளி­யேறிச் சென்ற உபாலி தென்­னக்கோன் இம்­புல்­கொட பகு­தியில் வைத்து தாக்­கு­த­லுக்கு உள்­ளான விடயம் குறித்து, கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் கீழ் இரு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தன.

எனினும் அதில் எவ்­வித முன்­னேற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை. இந் நிலையில் தான் இது குறித்த விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணை­களும் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யா­ள­ரான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்­வா­வி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

padamபொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா, பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் ஆகி­யோ­ருடன் உப­பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான சுனில் சர­ண­பால, ஜய­வீர உள்­ளிட்ட குழு­வினர் இந்த விவ­காரம் மீதான விசா­ரணைக் குழு­வுக்குள் உள்­ளீர்க்­கப்­பட்­டனர்.

உண்­மையில் இந்தத் தாக்­குதல் நடந்து சுமார் ஏழரை வரு­டங்கள் கடந்­ததன் பின்­னரே அதன் முத­லா­வது சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அதா­வது சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டை­யவர் என கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரே இந்தத் தாக்­குதல் குழு­விலும் இருந்­தவர் என புல­னாய்வுப் பிரிவு கூறு­கின்ற நிலை­யி­லேயே அந்த விவ­காரம் தொடர்­பிலும் அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் லசந்­தவின் கொலை­யையும் உபாலி தென்­னக்­கோனின் கொலை முயற்­சி­யையும் ஒரே குழுவே முன்­னெ­டுத்­தது என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழு­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

எனினும் அந்தக் குழுவில் அங்கம் வகித்­த­தாக நம்­பப்­படும் ஒரே ஒரு சந்­தேக நபரே தற்­போது வரைக்கும் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஏனையோர் தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

உபாலி தென்­னக்கோன் மற்றும் அவ­ரது மனைவி தம்­மிகா தென்­னக்கோன் ஆகியோர் மீதான தாக்­கு­தல்கள் கடந்த 2009 ஜன­வரி மாதத்தில் யுத்தம் உக்­கி­ர­மாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த போது முன்­னெ­டுக்­கப்­பட்­டவை.

எனவே அப்­போது என்ன நடந்­தது என்­பதை உபாலி தென்­னக்கோன் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் வைத்­தி­ய­சா­லையில் வைத்து பகிர்ந்­து­ கொண்டார். அதன்­படி அவர் கூறிய விதத்­தி­லேயே நாம் அச்­சம்­ப­வத்­தையும் மீள ஞாப­கப்­ப­டுத்­து­கின்றோம்.

‘ அப்­போது 6.40 மணி இருக்கும். இம்­புல்­கொ­டவில் உள்ள எமது வீட்­டி­லி­ருந்து நானும் மனை­வியும் காரில் பய­ணித்தோம். கண்டி வீதிக்குச் செல்­வ­தற்­காக யாகொட வீதி­யுடன் இணையும் ட்ரக்மோ சந்­தி­யூ­டாக நான் வாக­னத்தை செலுத்­தினேன்.

அப்­போது பாதையின் ஓரத்தில் இருவர் சிரித்து பேசிக்­கொண்­டி­ருப்­பதை நான் கண்டேன். அவர்­க­ளுக்கு பின்னால் மேலும் இரு­வரும் இருந்­தனர்.

திடீ­ரென அவர்­களில் இருவர் எனது காரின் கண்­ணா­டி­களை உடைக்க ஆரம்­பித்­தனர். இதன்­போது ஏனைய இரு­வரும் திடீ­ரென என் பக்கம் பாய்ந்­தனர். நானும் எனது மனை­வி­யுமே வாக­னத்தில் இருந்தோம். எனது இடது பக்க ஆச­னத்தில் மனைவி இருந்தார். எனக்கு அப்­போது எத­னை­யுமே ஊகித்­துக்­கொள்ள முடி­யாமல் இருந்­தது.

பொல்­லு­களால் இருவர் வாக­னத்தின் கண்­ணா­டி­களை உடைத்த போதும் அவர்கள் எனது மனைவி தம்­மிகா இருந்த பக்கம் செல்­ல­வில்லை. இதன் போது காரினுள் கையைப் போட்ட அவர்கள் என்னை கூரிய ஆயு­தங்­களால் தாக்­க­முற்­பட்­டனர்.

அதன்­போது எனது மனைவி என்னை கட்­டி­ய­ணைத்­துக்­கொண்டார். அதனால் அப்­போது எனக்கு கத்தித் தாக்­குதல் காயங்கள் ஏற்­ப­ட­வில்லை. அவை எனது மனை­வியைப் பதம் பார்த்­தன.

எனது முகத்தை இருவர் பொல்­லு­களால் பதம்­பார்த்­தனர். தொடர்ச்­சி­யாக பொல்­லு­களால் தாக்கி என்னை கூரிய ஆயு­தங்­களால் குத்­தினர். நான் எல்லா பக்­கமும் திரும்பித் திரும்பி என்னைக் காத்­துக்­கொள்ள முயன்றேன். எனது மனைவி என்னை கட்­டி­ய­ணைத்­துக்­கொண்­டி­ருந்­ததால் தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு என்னை சரி­யாக இலக்கு வைக்க முடி­யாமல் போனது.

மனை­வியின் வலது கையில் தாக்­குதல் கார­ண­மாக இரத்தம் பெருக்­கெ­டுத்து ஓட ஆரம்­பித்­தது.

ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்­காது. கத்திக் குத்­து­களால் எனது உடம்பில் காயம் ஏற்­பட்­டது. முகத்தை அவர்கள் தாக்­கி­யதால் என்னால் என்ன நடக்­கின்றது என்­பதை உணரக் கடி­ன­மாக இருந்­தது.

எல்லாம் முடிந்த பிறகு தாக்­கு­த­லுக்கு வந்த அந்த நான்கு பேரும் யாகொட புகை­யி­ரத நிலையப் பக்­க­மாக மோட்டார் சைக்­கிளில் வேக­மாக சென்று மறைந்­தனர். அவர்­களை மீளக் காணு­மி­டத்து அடை­யாளம் காட்­டவும் முடியும்’

என உபாலி தென்­னக்கோன் அப்­போது பொலி­ஸா­ரி­டமும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமும் சம்­பவம் குறித்து விப­ரித்­தி­ருந்தார்.

இந்தத் தாக்­குதல் இடம்­பெற்ற போது அதனை கண்ணால் கண்­ட­வர்கள் எவரும் அப்­பி­ர­தே­சத்தில் இருந்­த­தாக இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

எனினும் தாக்­கு­த­லுக்கு வந்­தோரை மீண்டும் கண்டால் நிச்­சயம் அடை­யாளம் காட்­டலாம் என உபா­லியும் அவர் மனை­வியும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் கூறி­யுள்­ள­மை­யா­னது விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு மிகப் பெரிய ஒரு பிளஸ் பொயின்ட் எனலாம்.

எனினும் உபா­லியின் கொலை முயற்சி தொடர்பில் எது­வித ஆதா­ரங்­களும் சிக்­காத நிலையில் அது குறித்து பல்­வேறு கோணங்­களில் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இந்த தாக்­கு­த­லை­ய­டுத்து உபா­லியும் அவர் மனை­வியும் கூட பாது­காப்பு கருதி அமெ­ரிக்­காவில் தங்­கி­விட்­டனர்.

இந்­நி­லையில் தான் கடந்த 2015 பெப்­ர­வரி மாதம் அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோ­னினால் லசந்த படு­கொலை விவ­காரம் குறித்த விசா­ர­ணைகள் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான நிஸாந்த சில்­வா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அத­னையும் நடத்தும் போதே உபாலி தென்­னக்கோன் கொலை முயற்சி மற்றும் லசந்­தவை கொலை செய்தோர் ஒரே குழு என்­ப­தற்­கான சான்­றுகள் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றன. (லசந்­தவின் கொலை சந்­தே­க­நபர் கைதா­னமை தொடர்பில் அண்­மையில் விரி­வாக தந்­தி­ருந்தோம்)

லசந்த விக்­ர­ம­துங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி மோட்டார் சைக்­கிளில் வந்த நால்­வரால் அத்­திட்­டிய பகு­தியில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்டார். இந்­நி­லை­யி­லேயே அதே ஆண்டு அதே மாதம் 23 ஆம் திகதி கம்­ப­ஹாவில் வைத்து உபாலி தென்­னக்கோன் மீதும் அதே பாணியில் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் லசந்த படு­கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் தற்­போ­தைய சிறப்பு விசா­ரணை அதி­காரி நிஸாந்த சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு, அக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய தொலை­பே­சிகள் மற்றும் சிம் அட்­டைகள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டது.

இந்த சிம் அட்­டைகள் எவ்­வாறு யாரால் பெறப்­பட்­டன என்­பது குறித்து நாம் ஏற்­க­னவே லசந்த கொலை விவ­காரம் தொடர்பில் அண்­மையில் எழு­திய கட்­டு­ரையில் விரி­வாக தந்­தி­ருந்தோம்.

இந் நிலையில் லசந்த கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு ஒரு மாதத்­துக்கு முன்னர் இணைப்பில் வந்­தி­ருந்த குறித்த 5 தொலை­பேசி இலக்­கங்கள் குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்ந்த போதே உபா­லி­யையும் அவர் மனை­வி­யையும் தாக்­கி­யோரும் குறித்த சந்­தேக நபர்­களே என்ற விட­யத்தை புல­னாய்வுப் பிரி­வி­னரால் வெளிப்­ப­டுத்த முடிந்­தது.

எவ்­வா­றா­யினும் குறித்த ஐந்து தொலை­பே­சிகள் மற்றும் சிம் அட்­டை­களைப் பயன்­ப­டுத்­தியோர் யார் என்­பது இது­வரைக் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

இந்த 5 தொலை­பே­சி­க­ளையும் பயன்­ப­டுத்­தியோர் லசந்த விக்­ர­ம­துங்க வழ­மை­யாக பயன்­ப­டுத்தும் அனைத்து வீதி­க­ளிலும் லசந்­தவை பின்­தொ­டர்ந்­துள்­ளனர். இதற்­கான ஆதா­ரங்கள் தொலை­பேசி வலை­ய­மைப்பு தக­வல்கள் ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் வசம் உள்­ளன.

அதே போன்று 2009.01.06 முதல் 2009.01.07 வரையில் உபாலி தென்­னகோன் வீட்டின் அரு­கிலும் இவர்கள் தகவல் சேக­ரித்­துள்­ளனர். உபாலி தென்­னக்கோன் வீட்டின் அருகில் இருக்கும் டயலொக் தொலை­பேசி கோபுர ஆய்வுத் தக­வல்கள் ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இதனை உறுதி செய்­கின்­றனர்.

இந்­நி­லையில் தான் ஒப்­பீட்டின் அடிப்­ப­டையில் லசந்த கொலைக்­கா­ரர்­களே உபாலி மீதான தாக்­கு­த­லையும் முன்­னெ­டுத்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்­களை வைத்து வாதி­டு­கின்­றனர்.

இதனை விட உபாலி தென்­னக்கோன் சென்ற வீதியில் குறித்த தொலை­பேசி இலக்­கங்­களைப் பயன்­ப­டுத்­தியோர் அன்­றைய தினம் இருந்­த­மைக்­கான அறி­வியல் தட­யங்­களும் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

லசந்த கொலை விவ­கா­ரத்தில் கண் கண்ட சாட்சி ஒருவர் உள்ளார். அத்­துடன் கொலையின் பின்னர் லசந்­தவின் சார­தியும் கடத்­தப்­பட்டார். அதனால் அவர் தன்னை கடத்­தி­ய­வரை அடையாளமும் காட்டியுள்ளார்.

இந்நிலையில் உபாலி தென்னக்கோன் அப்போது பொலிஸாருக்கு தெரிவித்த, ‘தாக்குதல்தாரிகளை மீளகாணும் இடத்து அடையாளம் காட்டுவேன்’ என்ற வார்த்தையின் பிரகாரம் லசந்த கொலை குறித்து கைதான இராணுவ சார்ஜன்ட் மேஜர் உடலாகமவை உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கம்பஹா நீதிவான் காவிந்யா நாணயக்கார கடந்தவாரம் உத்தரவொன்றினையும் பிறப்பித்த நிலையில் அடையாள அணிவகுப்பானது எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து இலங்கை வரும் உபாலி தென்னக்கோன் அன்று அடையாள அணிவகுப்பில் தனது மனைவி சகிதம் பங்கேற்று தன்னை தாக்கியவர்களில் தற்போது கைதாகியுள்ள சார்ஜன்ட் மேஜர் இருந்தாரா என்பதை அடையாளம் காட்டவுள்ளார்.

அந்த அடையாள அணிவகுப்பைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேலும் பல திருப்பங்கள் இருக்கும் என நம்பலாம்.

எம்.எப்.எம்.பஸீர்

Share.
Leave A Reply