இளம்பெண் ஒருவரின் காதை கடித்து வைத்த நபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
21 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி இரவு விகனில் உள்ள ஒரு டாக்ஸி பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அதன்போது அங்கு இருந்த நபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் நெருங்கி வந்த அவர் திடீரென அந்த பெண்ணின் காதை கடித்துள்ளார்.
இவ் எதிர்பாராத தாக்குதலால் அப்பெண்ணிற்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்து செல்லும் போது அந்த நபர் சிரித்துக் கொண்டு செல்வது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது.
இதனைத்தொடர்ந்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.