ஈரானில் மது அருந்தினால் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் அழிக்கப்படும் என்ற வதந்தியை நம்பி, சட்டவிரோத மதுபானம் அருந்திய 27 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
ஈரானில் வாழும் இஸ்லாமிய மக்கள் மது அருந்த பரிபூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிறமதத்தினருக்கு மட்டும் அனுமதி உண்டு.
கொரோனா வைரஸ் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது.
ஈரானில் 237 பேர் கொரோன வைரஸினால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 7161 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மது அருந்தினால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் தப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற வதந்தியை நம்பி ‘மெதனோல் எனும் எரிசாராயம் கலந்த மதுவை அருந்திய 27 பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இவர்களில் 20 பேர் ஈரானின் வடமேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தையும் 7 பேர் அல்போர்ஸ் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.