ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்

    AdminBy AdminApril 13, 2020No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.

    அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.

    அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர். அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

    உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.

    தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500 முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2020
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version