ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக 130கிமீ சைக்கிளில் பயணம் செய்த நபர் – ஒரு நெகிழ்ச்சி கதை

    AdminBy AdminApril 13, 2020No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன்.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் 49 வயது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    சிகிச்சைக்காக புதுச்சேரி வந்த பிறகு, தனது மனைவிக்கு சிகிச்சை முழுமை பெற சில மாதங்கள் ஆகும் என்பதாலும், சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்வதற்கு வாரந்தோறும், கும்பகோணத்திற்குத் தொடர்ச்சியாக சென்றுவர நேரிடும் என்பதாலும், சிகிச்சை முடியும் வரை புதுச்சேரியில் தங்கியிருந்துள்ளார் அறிவழகன்.

    அறிவழகனின் கையில் பணம் இல்லாததால், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்கு தினசரி 10 ரூபாய் கட்டண செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில், தனது மனைவியை மட்டும் தங்க வைத்துவிட்டு, அறிவழகனும் அவரது மகனும் மருத்துவமனை வளாகத்தில் படுத்துக்கொண்டனர்.

    குறிப்பிட்ட சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் மருத்துவமனையில் இல்லாத சூழலில், அதனை வெளியே வாங்குவதற்கும், தினசரி உணவிற்கும், பணம் தேவைப்படும் என்பதால், அவருக்குப் பரிட்சையம் இல்லாத புதுச்சேரி நகரப் பகுதியில் வேலைத் தேடி அலைந்த அறிவழகனுக்கு கட்டட வேலை ஒன்று கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் தனது மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும், எஞ்சிய நாட்களில் கட்டடத் தொழிலுக்கும் சென்றபடி இருந்தார். இப்படியே மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தனது மனைவியின் முதல் கட்ட சிகிச்சை முடிந்து. பின்னர், அவரை 3 வாரத்திற்குப் பிறகு பரிசோதனைக்காக அழைத்து வர மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் மகனுடன் கும்பகோணம் திரும்பினார்.

    மருத்துவர்கள் கொடுத்த 3 வாரம் முடிவடையும் நேரத்தில், அவரது மனைவிக்குச் சிகிச்சை செய்த இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பேருந்து சேவைகள் இல்லாத சூழலில், தனது மனைவியைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எப்படி அழைத்து செல்வதென்று தெரியாமல் இருந்தார்.

    பிறகு, அவர் செல்வதற்கு வேறு வழி இல்லாத நிலையில், உடனே அதிகாலை 4.30 மணியளவில் தனது சைக்கிள் மூலமாக புதுச்சேரி அழைத்துச் சென்றுவிடலாம் என தனது மனைவியைச் சைக்கிளின் பின்புறம் ஏற்றிக்கொண்டு, சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்குச் சைக்கிளில் பயணத்தை தொடங்கினார் அவர்.

    தொடர்ந்து 11 மணி நேரம் பயணம் செய்ததில் மதியம் சுமார் 2.30 மணியளவில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சென்ற போது மனைவி மஞ்சுளாவிற்குச் சற்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, வழியில் சாப்பிடுவதற்காக அவர் கட்டி வைத்த பழைய சோற்றினை ஊட்டி, சாப்பிட வைத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து, தனது மனைவி கீழே விழுந்து விடக் கூடாது என்பதற்காக, அவர் உடுத்தியிருந்த வேஷ்டியைக் கொண்டு, சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த மனைவியைத் தனது இடுப்போடு சேர்த்து சுற்றிக் கொண்டு சைக்கிளை ஓட்ட தொடங்கினார்.

    பின்னர், அன்றிரவு 10.45 மணியளவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து, வந்து சேர்த்தார். அவரது மனைவிக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவரை மறுதினம் காலையில்தான் பார்க்க முடியும் என்று ஜிப்மர் பாதுகாப்புப் பணியாளர் கூறவே, அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டனர் அறிவழகனும் அவரது மனைவியும்.

    பின், காலையில் மருத்துவர்கள் மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

    இது குறித்து அறிவழகனிடம் கேட்டபோது, “மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள், விட்டால் இறந்து விடுவாளோ என்று பயந்துவிட்டேன். அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும் என்னால்? கொரோனாவால் புதுச்சேரி செல்ல பேருந்தும் இல்லை.

    அப்போது எனக்குத் தெரிந்தது எனது சைக்கிள் மட்டும் தான். வழியில் அவளுக்குப் பசித்தால் கொடுக்கலாம் என வீட்டிலிருந்த பழைய சோற்றைக் கட்டிக்கொண்டு, எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பிவிட்டேன். எப்படி இவ்வளவு தூரம் வந்தேன், எப்படி சைக்கிள் மிதித்தேன் என்று எதுவும் தெரியவில்லை. அவளை எப்படியாவது மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் எல்லாருமே கடவுள்கள்,” என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார் அவர்.

    “சிகிச்சைக்குப் பிறகு எங்களைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்ப மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர். எனது மனைவிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை என் கையில் கொடுத்து எங்களை வழி அனுப்பினர், மேலும் எங்களைப் பத்திரமாக அழைத்துச் செல்லும்படியும் ஓட்டுநரிடம் தெரிவித்தனர்” என்கிறார் அறிவழகன்.

    ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது, “அவர் எப்படி இந்த வயதிலும், இவ்வளவு தூரம் அதுவும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து தடைகளையும் மீறி வந்தார் என்பதைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

    பின்னர், அன்று நாங்கள் இவரது மனைவிக்கு தான் முதல் சிகிச்சை அளித்தோம். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தில் தெரியப்படுத்தினோம், ஜிப்மர் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வசதி சேவையானது குறிப்பிட்ட தூரம் வரை இலவசமாக அளிக்கப்படும். ஆனால், இவர் 130 கிமீ செல்ல வேண்டும் என்பதால் ஜிப்மர் நிர்வாகத்தின் உதவியுடன் இலவசமாக ஆம்புலன்சில் வீடு வரை செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன” என்கிறார் அவர்.

    Post Views: 2

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2020
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version