நடிகை சஞ்சனா சிங், தலைகீழாக நின்ற நிலையில், ஆடை அணிந்து காட்டி, சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான சவால் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

முடிந்தவரை தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் பிரபலங்கள் பொழுதை போக்கி வருவதோடு, தங்கள் செய்த விஷயங்களை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனா சிங், தலைகீழாய் நின்றபடி மேலாடை அணிந்துகொள்ளும் சவால்விடுத்து, செலஞ்ச் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply