தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரன, அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி திலங்க பெரேரா ஊடாக அவர் இம்மனுவை இன்று (29) தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்திலிருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், அது குறித்து சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.

தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அது குறி த்து அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. தயாராகி வருவதாக சுட்டிக்காட்டியே, அதனைத் தடுக்கக் கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply