ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் ரூ.1 கோடி ஊதியம் பெற்ற ஆசிரியர் கைது

    AdminBy AdminJune 7, 2020No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 பள்ளிகளில் பணியாற்றி ஒரு.1 கோடி வரை ஊதியம் பெற்ற கில்லாடி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    இம்மாநில மேற்குப்பகுதியில் உள்ள காஸ்கன்ச் பொலிஸார் வரை கைது செய்து விசாரணை துவக்கி உள்ளனர்.

    உ.பி.யின் அரசு பள்ளிகளில் பல்வேறு வகை ஊழல் புகார்கள் அவ்வப்போது வருவது உண்டு. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது வெளியாகியுள்ள புகார், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது.

    இம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஸ்தூரிபா காந்தி சிறுமிகள் பள்ளி(கேஜிபிவி) எனும் பெயரில் நடுநிலைப்பள்ளிகள் நடைபெறுகின்றன.

    தங்கிப் பயிலும் வசதிகளுடனான அதில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர்.

    இவர்களில், பெரும்பாலானவர்கள் ஒப்பந்த ஊதியமாக ரூ.30,000 பெறுபவர்கள். இவர்களை பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்க உ.பி. மாநில அடிப்படை கல்வித்துறை முடிவு செய்தது.

    கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் பணியில், அனாமிகா சுக்லா எனும் பெயரில் ஒர் ஆசிரியை 25 பள்ளிகளின் பதிவேடுகளில் இருப்பது தெரிந்துள்ளது.

    இவை அமேதி, அம்பேத்கர் நகர், அலிகர், ராய்பரேலி, சஹரான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அமைந்துள்ளன.

    ஒப்பந்த பணியிலான அவர் பெப்ரவரி வரை 13 மாதங்களாக 25 பள்ளிகளிலும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உபி மாநில அடிப்படை கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று மதியம் அனாமிகா சுக்லா காஸ்கன்ச் நகரக் காவல்நிலையப் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இங்கு அவர் தம் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ய வந்த போது சிக்கியதாகக் கூறப்படுகிறது.

    மெயின்புரியை சேர்ந்த ராஜேஷ் சுக்லா என்பவரின் மகளான அனாமிகாவுக்கு அதே மாவட்டத்தை சேர்ந்தவர் உதவியால் இந்த ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.

    இதற்கு உரிய தகுதி இல்லாத நிலையில் அவருக்கு ஒப்பந்த முறையிலான பணி அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான தகுதியை பெறவேண்டி அனாமிகா, கோண்டாவின் ஒரு கல்லூரியில் பி.எட் கல்வி பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிந்துள்ளது.

    இவரை வேறு எவராவது ஒரே சமயத்தில் பல பள்ளிகளில் ஊதியம் பெறுகிறார்களா எனவும் விசாரணை நடைபெறுகிறது.

    மெயின்புரியை சேர்ந்த அந்த ஆசிரியையான அனாமிகா சுக்லாவிற்கு ஏப்ரல் இறுதியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காதவருக்கு நினைவூட்டல் கடிதம் மே 26 இல் அதன் அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.

    அவரை போனிலும் தொடர்புகொள்ள முடியாதமையால், அவர் தலைமறைவாகி விட்டதாகக் கருதப்பட்டு வழக்கு பதிவானது. இந்த செய்தி நேற்றுமுன்தினம் பரவலாக வெளியான நிலையில் நேற்று அனாமிகா கைது செய்யப்பட்டுள்ளார்.

    உ.பி.யில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின் அரசு பள்ளி ஆசிரியர்கள் தம் கைப்பேசிகளில் ‘செல்பி’ படம் எடுத்து வருகையை பதிவு செய்யும் முறை அமலாக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழல் ஒருவர் ஒரு பள்ளிக்கும் அதிகமாக பணியாற்றும் வாய்ப்புகள் இல்லை. எனவே, உ.பி. மாநில அடிப்படை கல்வித்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த மோசடி நடந்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

    மத்திய அரசின் நிதி உதவியுடன் கேஜிவிபி வகை பள்ளிகள் 2004 ஆம் வருடம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஏழை பெண் குழந்தைகளுக்காக துவக்கப்பட்டன.

    எனினும், எதிர்பார்த்த பலன் இப்பள்ளிகளால் உ.பி.யில் கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது.

    இதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அதிக ஒதுக்கீடு பெற்று பயின்று வருகின்றனர். இதுபோன்ற பள்ளிகள் நாடு முழுவதிலும் சுமார் 3800 செயல்படுகின்றன.

    Post Views: 317

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2020
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    • “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version