ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»இலங்கை திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஷ: என்ன நடக்கிறது கடற்படைத் தளத்தில்?
    இலங்கை செய்திகள்

    இலங்கை திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஷ: என்ன நடக்கிறது கடற்படைத் தளத்தில்?

    adminBy adminMay 13, 2022No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திருகோணமலை நகரம் கொழும்பு நகரைப் போல இல்லை. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறவில்லை. வன்முறைகளும் பதற்றமும் கிடையாது. பொதுவாக அமைதியாகவே இருக்கிறது.

    ஆயினும் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை படைப்பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததும் கொழும்பு நகரின் பரபரப்பு இங்கும் ஒருநாள் தொற்றியிருந்தது. அது கடந்த மே 9-ஆம் தேதி திங்கள்கிழமை.

    கொழும்பு காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டக்காரர்கள் மீதும், கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பல இடங்களிலும் ஆளுங்கட்சியினரைக் குறிவைத்து தாக்குதல்கள் நடந்தன. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையும் தப்பவில்லை.

    போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பாதுகாப்பு கருதி அவர் திருகோணமலைக்கு வந்துவிட்டதாக அப்போதே தகவல் பரவிக் கொண்டிருந்தது.

    “சத்தம் கேட்டு நான் இங்கு வந்தேன். இருந்தபோதிலும் முன்கூட்டியே மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினர் கடற்படை தளத்தினுள் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    இங்கே வந்து பார்த்த போது மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது,” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஹாஷி ஹெட்டியாராச்சி.

    “மஹிந்த மற்றும் அவர்களின் குடும்பத்தை இங்கு தங்க விடாமல் வெளியேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு பாதுகாப்பு பலமாக இருந்ததாலும் பிரச்னைகள் இன்றி மாலை நான்கு மணியளவில் கூட்டம் கலைந்து சென்றது” என்றார் அவர்.

    கூட்டம் அதிகமாக வந்ததும் பாதுகாப்புப் படையினர் கடற்படைத் தளத்தின் முன்பக்கச் சுவர்களில் இருந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதாக அருகே வசிக்கும் ஹுசைன் தெரிவித்தார்.

    “முதலில் தடுப்புகள் ஏதுமில்லை. போராட்டக்காரர்கள் அதிகமானதும் வாசலைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டன” என்றார் அவர்.

    போராட்டம் நடந்த அந்த ஒருநாள் மட்டும்தான் திருகோணமலையில் பதற்றம் இருந்தது. அந்தத் தருணத்தில் மஹிந்த குடும்பத்தினர் அங்குதான் இருக்கின்றனர் என்று யாரும் உறுதி செய்யவில்லை. சமூக ஊடகங்களில்தான் இந்தத் தகவல் அதிகமாகப் பரவியது.

    ஹாஷி ஹெட்டியாராச்சி

    10-ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத் துறைச் செயலாளர் குணரத்ன, பாதுகாப்பு கருதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தபோதுதான் இந்தத் தகவல் உறுதியானது.

    ஆனால், அதன் பிறகு திருகோணமலையில் போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. காவல்துறையும் பாதுகாப்புப் படைகளும் கடற்படைத் தளத்துக்குச் செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர்.

    அடையாள அட்டைகளைக் காண்பித்த பிறகே கடற்படைத் தளத்துக்கு அருகே செல்ல முடிகிறது.

    வியாழக்கிழமையன்று அந்தப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்றதுமே காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவலர்கள், காவல்துறையின் ஊடகப் பிரிவினர் என பலரும் அங்கே வரத் தொடங்கினர்.

    காவல்துறையினரின் வாகனங்கள் வந்து சேர்ந்தன. பிபிசி தமிழ் குழுவிடம் அவர்கள் விவரங்களைக் கேட்டுக் கொண்டனர். எனினும் கடற்படைத் தளத்தைச் சுற்றி செய்தி சேகரிப்பதைத் தடுக்கவில்லை.

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களிலும் கடற்படைத் தளம் அருகேயுள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே இந்தப் பகுதியைக் கடந்து சென்றன.

    கடற்படைத் தளத்துக்குள் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மட்டும் அதற்குள் சென்று வருவதைக் காண முடிகிறது.

    இரண்டாம் உலகப் போர் நடந்தபோது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இது இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    திருகோணமலையில் இருக்கும் இயற்கைத் துறைமுகத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தளம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்கது. இதன் அருகிலேயே விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
    திருகோணமலை

    மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்ட நிலையில், அவரும் அவர் தொடர்புடைய 16 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மே 9-ஆம் தேதி காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறை தொடர்பான வழக்கில் இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அவர்களது பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

    திருகோணமலையில் அதிஉயர் பாதுகாப்பில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் அதே வேளையில் அதிபர் மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

    திருகோணமலையில் இருந்தபடியே அவருக்கு வாழ்த்துச் செய்தியையும் ராஜபக்ஷ பதிவு செய்திருக்கிறார்.

    Post Views: 83

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022

    நாட்டில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டது

    May 21, 2022

    கொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி தாக்கப்படும் சிசிரிவி காணொளிகள் இதோ!

    May 20, 2022

    Leave A Reply Cancel Reply

    May 2022
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Advertisement
    Latest News

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு

    May 21, 2022

    RD (Restricted default) தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    • பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!
    • 21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!
    • லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version