ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, January 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    வெளிநாட்டு செய்திகள்

    ரஷ்ய விமான விவகாரத்தில் அரசாங்கம் தலையிட முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

    AdminBy AdminJune 6, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ரஷ்ய விமான விவகாரத்தில் அரசாங்கம் தலையிட முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

    ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை குறித்து ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்ய Aeroflot விமான நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

    ரஷ்ய Aeroflot எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கும் மற்றுமொரு நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார்.

    சம்பவத்துடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கையில் அரசாங்கம் தலையிட முடியாது என தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    அத்துடன், தற்போதைய நிலைமை குறித்து ரஷ்ய தூதரகம் தௌிவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    இந்த விடயம் தொடர்பில் நாளை(06) நீதிமன்றத்தில் அறிக்கையிட்டு விமானத்தை விடுவிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ரஷ்ய Aeroflot எயார்லைன்ஸ் நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

    இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக குறித்த விமானத்தின் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அமைச்சர் தமது கவலையை வௌியிட்டுள்ளார்.

    இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, ரஷ்ய Aeroflot விமான நிறுவனம், கொழும்புக்கான தனது வணிக விமானங்களை நிறுத்தியது.

    இலங்கையில் தமது விமானம் தடையின்றி பறக்க முடியும் என்பதை உறுதி செய்வதில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அத்துடன், கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானங்களுக்கான விமானச்சீட்டு விற்பனையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக Aeroflot நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யா நேற்று(04) தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

    இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஜனிதா லியனகே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு எதிர்ப்பு வௌியிடப்பட்டதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ரஷ்ய Aeroflot விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

    அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

     

    Post Views: 427

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    விடாமல் துரத்திய யானை – 8 கி.மீ தூரம் பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பற்றிய ஓட்டுநர்!- வீடியோ

    November 18, 2022

    சீனா vs தைவான் – தைவான் தீவின் சுதந்திரம் போருக்கு வழிவகுக்கும் – எச்சரிக்கும் சீனா

    June 11, 2022

    யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?

    May 12, 2022

    Leave A Reply Cancel Reply

    June 2022
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    January 29, 2023

    காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்

    January 29, 2023

    மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!

    January 29, 2023

    ’’அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’’: ஆண்மை இழந்த கணவன் அறிவுரை

    January 29, 2023

    புட்டீன் மீண்டும் விடுக்கும் அணுக்குண்டு மிரட்டல்

    January 29, 2023
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    • 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி…! சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • (no title)
    • காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்
    • மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!
    • ’’அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’’: ஆண்மை இழந்த கணவன் அறிவுரை
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    • 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி…! சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version