யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத முதியவரின் சடலமொன்று இன்றையதினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை சடலத்தை இனங்காண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.

Share.
Leave A Reply