ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் அவரது கிரீடமும் ஒன்று.

இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரத்தை பற்றி உளவும் கதையை இங்கு பார்க்கப்போகின்றோம்.

1952ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி இங்கிலாந்தின் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத், 2022ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை சரியாக 70 ஆண்டுகள் 214 நாட்கள் இங்கிலாந்தின் ராணியாக இருந்திருக்கிறார்.

இதன் மூலம் உலகில் நீண்ட காலம் ஆட்சிசெய்த இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராணி இரண்டாம் எலிசபெத்.

இவருக்கு முன்பாக பிரான்ஸை ஆண்ட பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சி செய்து உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல் நபராக இருக்கிறார்.

இங்கிலாந்தின் ராணிகள் அரண்மனையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் கிரீடம் அணிவது மரபு.

அப்படி அணியும் அந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற கோஹினூர் வைரம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கோஹினூர் வைரத்தின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.

105 கேரட் அதாவது 21.6 கிராம் எடை கொண்ட கோஹினூர் வைரத்தின் பிறப்பிடம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் வைர சுரங்கமாகும்.

விலை மதிப்பற்ற இந்த வைரம் இந்து, மொகலாய, பெர்சியர், ஆப்கான், சீக்கியர் என்ற பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த மன்னர்களின் வசம் இருந்திருக்கிறது.

இந்த வைரத்தை கைப்பற்ற இவர்களுக்குள் பல போர்களும் நடந்திருக்கிறது.

மொகலாய மன்னர் பாபரின் வசம் வந்த இந்த வைரம் அதற்கு பிறகு அவரின் வாரிசாக வந்த ஷாஜகான் மற்றும் அவுரங்க சீப் போன்ற மன்னர்களிடம் வழி வழியாக பயணித்திருக்கிறது.

பின்னர் இந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் வந்த பிறகு கிபி 1851ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டு ராணி விக்ட்டோரியாவின் கிரீடத்தை அலங்கரிக்க தொடங்கியது.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட இந்த வைரம், டவர் ஒப் லண்டனில் அரச குடும்பத்து ஆபரணங்களின் ஒருபகுதியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ராணி விக்டோரியாவிற்கு பிறகு ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சிக்கு வந்ததால் கடந்த எழுபது ஆண்டுகளாக கோஹினூர் வைரம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இப்படி இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்று பல வருடங்களாக ராணி இரண்டாம் எலிசபெத் கிரீடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம்,.

ராணிக்கு பின்னர் இளவரசியான டயானாவின் கிரீடத்தை அலங்கரிக்க போகின்றது என்று முன்பு நினைத்திருப்போம்.

ஆனால் அவர் விபத்தில் மரணம் அடைந்துவிட்டார். இந்நிலையில் அடுத்து கிரீடம் யாரை அலங்கரிக்க காத்திருக்கிறது என பேச்சுகள் பரபரப்பாக எழுந்த நிலையில், அது புதிய மன்னராக பொறுப்பேற்கும் சார்ள்ஸின் மனைவியான கமிலா பார்க்கர் பவ்லஸ் அணியும் கிரீடத்தை அலங்கரிக்கும் என முடிவாகியுள்ளது.

ராணி 2ஆம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்ள்ஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்கிறார். ஆயினும் அவர் ராணியணிந்திருந்த கிரீடத்தை அணிய முடியாது.

சார்ள்ஸ்க்கும் அவரது முதல் மனைவி டயானாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1996ஆம் ஆண்டு இருவரும் மண முறிவு செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ், கமிலா பார்க்கரை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார்.

சார்ள்ஸ் கமீலாவை மணந்துக்கொண்டமையால் அடுத்த ராணி கமீலாதான். இவரையே எலிசபத் ராணியின் கிரீடம் அலங்கரிக்கப்போகி்ன்றது.

இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரத்தின் பெறுமதியை உணர்த்தும் ஒரு வரலாற்று சம்பவத்தை பார்ப்போம். . ஈரானிய பேரரசர், நாதிர் ஷா பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்களையும் நகரில் இருந்த செல்வந்தர்களின் சொத்துக்களையும் பறித்துக்கொண்டார். முகலாய பேரரசர் முகம்மது ஷா ரங்கீலாவின் ஆட்சி அப்போது டில்லியில் இருந்தாலும் அதன் அதிகாரத்தை நாதிர் ஷா அடைந்திருந்தார்.

56 நாட்களுக்குப் பிறகு டில்லியில் இருந்து ஈரானுக்கு திரும்ப முடிவு செய்த நாதிர் ஷா, இந்துஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை முகம்மது ஷாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.

ஆனால் இதுவரை நீங்கள் பறித்த செல்வங்கள் எல்லாம் முகம்மது ஷாவின் தலைப்பாகையில் ஒளிந்திருக்கும் செல்வத்திற்கு ஈடாகாது என்ற செய்தியை டில்லி அரசவை நர்த்தகி நூர்பாய், நாதிர் ஷாவுக்கு இகசியமாக அனுப்பினார்.

தந்திரமாக தலைப்பாகையை பெற விரும்பிய நாதிர் ஷா, அதற்கேற்ப யுக்தியை வகுத்தார்.

என்கிறத ஒரு சம்பவம். இது அந்த தலைபாகையில் இருந்தது கோஹினூர் வைரத்தின் பெறுமதியை எடுத்து காட்டுகின்றது.

இவ்வளவு எதிர்பார்ப்புகளை கிளப்பும் இந்த கோஹினூர் வைரம் தொடர்பாக மற்றொரு நம்பிக்கையும் பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

கோஹினூர் வைரம், தன்னுள் ஒரு சாபத்தையும் கொண்டுவருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என்றும் தொடர்ச்சியாக நம்பப்பட்டு வரப்படுகிறது. அதுபோல், அந்த வைரத்தை வைத்திருந்த ஆண்கள், ஒன்று அவர்களது மகுடத்தை இழந்தனர்.

அல்லது பிற துரதிஷ்டங்களால் பாதிக்கபட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக தனது ஆபரணமாக அந்த வைரத்தை அணிந்தனர். ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரம் எப்போதும் மகுடத்திற்கான ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகிறது.

சாபத்தின் சாத்தியக்கூறானது வைரத்தின் உரிமையைச் சார்ந்திருப்பதாக பழமையான நூல் ஒன்று தெரிவிக்கிறது. மேலும் அந்த நூலில், “யார் இந்த வைரத்தை வைத்திருக்கின்றாரோ அவர் உலகை வெல்லலாம்,

ஆனால் அதன் துரதிஷ்டங்கள் அனைத்தும் வெளிப்படும். கடவுள் அல்லது பெண் மட்டுமே அதன் தீமைகளிலிருந்து விலகி அதனை அணிய முடியும் என்று விளக்கபப்ட்டுள்ளது.

கோஹினூர் வைரம் இப்போது வரைக்கும் இங்கிலாந்தில் இருந்தாலும் எப்போதும் அது இந்தியாவின் சொத்து என்பதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து யாராலும் மறைக்க முடியாது என்பதே உண்மை.

பல முறை இந்தியாவால் திரும்ப கோரப்பட்டாலும், இங்கிலாந்து அரசு அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இப்போது இந்திய பிரதமர் மோடியியிடம் கூட இந்தியாவிற்கு அந்த வைரத்தை மீட்டு வரும்படி கோரிக்கைகளை் வைக்கப்படுவதனை பார்க்கின்றோம். ஆயினும் அது எளிதான ஒன்றல்ல.

பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோஹினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீளப்பெற்று வர வேண்டும் என்று கோரி சிவில் அமைப்பொன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்திருந்தது.

இதன்போது ,அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

கோஹினூர் வைரம், பஞ்சாபி மகாராஜா ரஞ்சித் சிங்கினால் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாக இந்தியாவின் கலாசார அமைச்சு பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வைரம் இப்போது கமீலாவின் கிரீடத்தை அலங்கரிக்க போகின்றது.

Share.
Leave A Reply