ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    அணு ஆயுதம் குறித்த புதின் பேச்சை உளறல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது – ஐரோப்பிய ஒன்றியம்

    AdminBy AdminSeptember 25, 2022No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடலாம் என்று விளாதிமிர் புதின் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

    யுக்ரேனில் நடக்கும் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மறைமுக மிரட்டலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார்.

    இந்தப் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

    ரஷ்யா ராணுவ அணிதிரட்டல் நடவடிக்கையிலும், யுக்ரேனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுவரும் நிலையில், இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

    யுக்ரேனின் எதிர்த்தாக்குதல்களால் ரஷ்ய படைகள் பின்வாங்கிவரும் நிலையில், யுத்தக்களத்தில் புதின் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

    “நிச்சயமாக இது ஓர் ஆபத்தான தருணம். ஏனெனில் ரஷ்ய ராணுவம் ஒரு மூலையில் தள்ளப்பட்டுள்ளது.

    மேலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக புதின் விடுத்த மிரட்டல் மிகவும் மோசமானது” என்று பொரெல் கூறினார்.

     

    யுக்ரேன் மீதான படையெடுப்பை ரஷ்யா தொடங்கி ஏழு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், புதினின் படைகள் பின்தங்கிய நிலையில் இருப்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
    ‘நான் பொய் சொல்லவில்லை’

    யுக்ரேனின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும் வகையில் ராஜதந்திர தீர்வு எட்டப்பட வேண்டும் எனக் கூறும் ஜோசப் பொரெல், இல்லையெனில் போரை நாம் முடித்தாலும் அமைதி இருக்காது என்கிறார்.

    இந்த வார தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பல்வேறு அழிவுகரமான ஆயுதங்கள் தங்கள் நாட்டில் இருப்பதாகவும், தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தப் போவதாகவும் என்று புதின் கூறினார். அதோடு தான் பொய் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

    “ஒருவர் பொய் சொல்லவில்லை என்று கூறும்போது அதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் பொரெல்.

    அதே உரையில், கட்டாய ராணுவ சேவையாற்ற மூன்று லட்சம் ரஷ்யர்களுக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டங்கள் நடந்துவரும் நிலையில், யுத்தக் களத்திற்கு செல்வதைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

    8,000 சதுர கிமீ நிலத்தை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக யுக்ரேன் அறிவித்த பிறகு, இந்த அழைப்பை புதின் விடுத்திருந்தார்.

    தற்போது ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான வாக்கெடுப்புகள் என்று கூறப்படும் நடவடிக்கையை, ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளில் ரஷ்யாவே நடத்திவருகிறது.

    யுக்ரேன் பகுதிகளை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான முயற்சி இது எனக் குற்றம்சாட்டியுள்ள யுக்ரேன், ஆயுதமேந்திய ரஷ்ய வீரர்கள் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    பகுப்பாய்வு
    லைஸ் டௌசெட்
    முதன்மை சர்வதேச செய்தியாளர்

    இந்தப் போர் தெளிவான முடிவின்றி நடந்துவருவதால், இந்த ஆண்டின் ஐநா பொதுச்சபையில் யுக்ரேன் குறித்த விவாதம் ஆதிக்கம் செலுத்தியது. ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் வியக்கத்தக்க வகையில் தெளிவின்றியும், வேதனையோடும் இருந்தார்.

    அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபற்றிக் கேட்டதைப் பகிர்ந்துகொண்டார்.

    விடுமுறையில் நண்பர்களுடன் செல்வது தொடங்கி, இந்த வாரம் ஐநா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுடன் அவர் கலந்து கொண்டதுவரை பட இடங்களிலும் பலரும் இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

    இந்தப் போரை நிறுத்துங்கள், “என்னால் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியவில்லை” என்று பலரும் திரும்ப திரும்ப கூறியது அவருக்கு வருத்ததைத் தந்திருக்கிறது.

    ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகள்தான் இந்தத் துன்பத்திற்குக் காரணம் என்ற கருத்தை ரஷ்யா ஏற்படுத்தியுள்ளதால் இந்தப் போர் தொடர்பான உரையாடலில் ஆதிக்கம் செலுத்த ஐரோப்பாவும் அதன் நட்பு நாடுகளும் திணறிவருவதாக பலர் தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததைப் பொதுவில் பகிர பொரெல் தயாராக இருந்தார்.

    அணு ஆயுதம் உட்பட மாஸ்கோவின் புதிய மற்றும் கவலையளிக்கும் அச்சுறுத்தல்கள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

    பொரெல் உட்பட பெரும்பாலான மேற்கத்திய தலைவர்கள் யுக்ரேன் மற்றும் பிறநாடுகளுக்கு ஏற்படும் தொலைநோக்கு விளைவுகளைக் கவனத்தில் எடுத்து, இந்தப் போரில் தொடர்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தில் திட்டவட்டமாக உள்ளனர்.

    ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விநியோகம் குறைவாக உள்ளது என்ற கவலையை பொரெல் நிராகரித்தார், மேலும், யுக்ரேனுக்கு தொடர்ந்து ராணுவ ஆதரவை வழங்க வேண்டும் என்றும், அதிபர் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றும், ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    இந்த மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

    “எங்கள் நாட்டில் உள்ள மக்கள் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்தால் தங்களால் வேலை செய்ய முடியாது, தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது” எனத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறும் அவர், இதே மாதிரியான கவலை ஆப்ரிக்க, தென் அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய தலைவர்களிடமும் வெளிப்பட்டதாக கூறுகிறார்.

    ‘டேங்கோ நடனமாட, உங்களுக்கு இரண்டு தேவை’என்று கூறி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தனது பங்கை ஆற்றுமாறு புதினுக்கு பொரெல் அழைப்பு விடுத்திருக்கிறார்.

    மாஸ்கோவிற்கும், கிரெம்ளினுக்கும் புதினுடன் பேசச் சென்ற அனைவரும், எனக்கு இராணுவ நோக்கம் உள்ளது.

    அந்த நோக்கங்களை அடையவில்லை என்றால் நான் போராட்டத்தைத் தொடர்வேன் என்ற புதினின் ஒரே பதிலுடன் திரும்பி வந்தனர். இது நிச்சயமாக கவலைக்குரிய போக்கு எனக் கூறும் பெரொல் தாம் தொடர்ந்து யுக்ரேனை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.

    Post Views: 103

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023

    18 வயது கனேடிய யுவதிக்கு 1,318 கோடி ரூபா ஜக்பொட் பரிசு

    February 6, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!
    • வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version