ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    திலினி பியமாலி: இலங்கையில் பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் சிக்கிய இவர் யார்?

    AdminBy AdminOctober 14, 2022No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    திலினி பியமாலி

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்ததாக பேசப்படும் பெண் குறித்து தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. அவரது பெயர் திலினி பியமாலி.

    கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, இவர் பல பிரபல்யங்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியதாக திலினி பியமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    அரசியல்வாதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் மாத்திரமன்றி, பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    திலினி பியமாலி என்ற குறித்த பெண், பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

    யார் இந்த திலினி பியமாலி?

    களுத்துறையில் பிறந்த திலினி பியமாலி, பாடசாலை கல்வியை கூட முழுமையாக நிறைவு செய்யாத ஒருவர் என அறிய முடிகின்றது.

    சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு மோசடி நடவடிக்கைகளின் ஊடாகவே செல்வந்தராகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எரிக் சொல்ஹெய்ம்: இலங்கை ஜனாதிபதி ரணிலின் காலநிலை ஆலோசகர் ஆனது எப்படி?
    இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது ஏன்?

     

    என்ன மோசடி?

    வெளிநாடுகளில் நிதி முதலீடு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி முதலீடு ஆகியவற்றுக்கு வட்டியை வழங்குவதாக கூறி பிரபல வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக திலினி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    கொழும்பு – உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியை, பல லட்சம் ரூபா வாடகைக்கு பெற்று, அதில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்றுள்ளார்.

    இவ்வாறு நடத்திச் செல்லும் நிதி நிறுவனத்தின் ஊடாகவே, நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தற்போது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறப்படும் பலரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, கடந்த 6ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    சிக்குண்ட பிரபல்யங்கள் யார்?

    திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக அரசியல்வாதிகள், பிக்குகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் என பலரது பெயர்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றனர்.

    திலினி பியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறுப்படும் தரப்பினர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த சில தினங்களாக முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கொடஹேவா, சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பொதுபல சேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

    திலினி பியமாலியின் திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தில் நிதி முதலீடு செய்ததாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பலர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

    அத்துடன், திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக மேலும் பலர் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு போலீஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

    விளக்கமறியலில் திலினியிடம் கைபேசி

    இதற்கிடையே, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி வசமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இருவேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டிருந்தன. திலினி பியமாலியின் சிறை கூடத்தை சோதனையிட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிறையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை உள்ளபோதும் அந்த சானங்கள் அவரிடம் வந்தது எப்படி என்பது குறித்து நேற்றைய தினம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

    கொழும்பு மேலதிக நீதவான் தலைமையிலான விசாரணை குழாமினால் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலி விசாரணைக்காக அண்மையில் உலக வர்த்தக மையத்திலுள்ள அவரது திரிகோ குரூப் அப் கம்பனி நிறுவனத்தின் அலுவலகத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

    தைகோ குழுமம் பதில்

    தமது நிறுவனம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து முழு நாடும் அறியும் எனவும், தமது நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும் தைகோ நிறுவனங்கள் குழும ஊடகப் பேச்சாளர் சுரங்கி கொடித்துவக்கு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

    ”இந்த சம்பவம் தொடர்பில் முழு நாடும் அறியும். அதனால், திரிகோ குழுமத்தில் கடமையாற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

    எமது கடமைகளை நாம் அன்று முதல் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். கடமைகளை அவ்வாறே முன்னெடுத்து செல்லுமாறு நிறுவனத்தின் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நிறுவனம் மூடப்படவில்லை. 34வது மாடியிலுள்ள திரிகோ குழுமத்தின் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் தவறிழைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு ஒன்றும் கிடையாது” என தைகோ நிறுவனங்கள் குழுமத்தின் ஊடகப் பேச்சாளர் சுரங்கி கொடித்துவக்கு தெரிவித்தார்.

    Post Views: 114

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்.. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்படும்-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    February 3, 2023

    13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.

    February 5, 2023

    பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

    February 5, 2023

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கண்டி இராச்சிய இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனுக்கு இந்தியாவில் நினைவேந்தல்.
    • பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version