ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    கடும் மழையால் மூவர் பலி; 55, 000 பேர் பாதிப்பு

    AdminBy AdminOctober 15, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

    கடும் மழை காரணமாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் 50 பேர்ச்சஸ் காணியில் அமைந்திருந்த 2 மாடி வீட்டில் ஜீ.பிரேமசிறியும் அவரது மனைவியும் மகன்மார் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

    குறித்த பகுதியில் நிலவிய அதிக மழையுடனான வானிலையினால் வீட்டின் மேற்புறத்தில் காணப்பட்ட மண்மேடு எவரும் எதிர்பாராத விதமாக சரிந்து வீழ்ந்துள்ளது.

    சம்பவம் இடம்பெற்றபோது பிரேமசிறியும் அவரது மனைவியும் அவர்களது மூத்த மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். 10 வயதான இளைய மகன் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார்.

    மண்மேடு சரிந்து வீழ்ந்தபோது, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அயலவர்கள் உடனடியாக தேட ஆரம்பித்துள்ளனர்.

    தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் பிரதிபலனாக வீட்டிற்கு முன்பாக காயங்களுடன் தந்தை மீட்கப்பட்டார். உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    தாயையும் மூத்த மகனையும் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. கடும் பிரயத்தனங்களுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களையடுத்து, மண்ணில் புதையுண்ட நிலையில் 48 வயதான தாய் கண்டுபிடிக்கப்பட்டார். எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிருடன் இருக்கவில்லை.

    வீட்டிலிருந்த செல்லப் பிராணியான நாய் இடிபாடுகளுக்குள்ளிருந்து வௌியே வந்துள்ளது.

    குறித்த வீட்டை அண்மித்து காணப்படும் பல வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன், 15 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, ஹொரணை – வகவத்த பகுதியில் நீர் நிறைந்த மாணிக்கக்கல் சுரங்கத்தில் தவறி வீழ்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளார்.

    நேற்று (14) பிற்பகல் பெய்த கனமழையால் சுரங்கத்தில் நீர் நிரம்பியதாகவும், உள்ளே இருந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வெளியே எடுக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    இதன்போது, குறித்த நபர் சுரங்கத்தில் வீழ்ந்து காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

    இதனிடையே களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டது.

    கடும் மழை காரணமா குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சில பகுதிகள் நீரில் மூ்கின.

    கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

    இதேவேளை, ஹாலிஎல – கிஹீகல்கொல்ல பகுதியிலுள்ள வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

    மழை காரணமாக கிண்ணியா – பூவரசன்தீவு, கல்லடி வெட்டுவான், மகாமார் ஆயிலியடி ஆகிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்க்கியுள்ளன.

    அத்துடன், கிண்ணியா குறிஞ்சாக்கேணி , நடுத்தீவு ஆகிய பகுதிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
    இதனால் சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கடும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

    மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

    Post Views: 108

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்.. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்படும்-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    February 3, 2023

    13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    • “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version