ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இந்தியா

    கோவை காரில் வெடித்த சிலிண்டர்: 6 தனிப்படை அமைத்து விசாரிக்கும் தமிழ்நாடு காவல்துறை

    AdminBy AdminOctober 23, 2022No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார்.

    காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்ததாக கோவை மாநகர காவல்துறை கூறுகிறது. காரை ஓட்டி வந்தவரின் உடல் முழுவதுமாக கருகியதால் அவரின் அடையாளம் தெரியவில்லை.

    இந்த நிகழ்வுக்குப் பின் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன், உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன், சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி ஸ்டீபன் ஜேசு பாதம் ஆகியோர் கோவை விரைந்தனர்.

    இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு இரண்டு சிலிண்டர்களில் ஒரு சிலிண்டர் வெடித்தாகவும், சிலிண்டர் வெடிப்பு நடந்த மாருதி 800 காரின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளர்களை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    அந்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ”பால்ரஸ் இல்லை; வேறு சில விஷயங்கள் உள்ளன” என்று மட்டும் அவர் கூறினார்.

     

    கோவையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் இருந்து கோவைக்கு வரவுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

    சைலேந்திர பாபு

    கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநர் கோவை வந்துள்ளார் என்றும் தற்போது தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

    முதல்கட்ட விசாரணை மூலம் தெரிந்த தகவல்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ”சதிச் செயலா என்று விசாரணையின் கடைசியில்தான் சொல்ல முடியும், எல்லா கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று டிஜிபி தெரிவித்தார்.

    கார் வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் சுமார் காவல் துறையினர் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாது கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சைலேந்திர பாபு நிகழ்விடத்துக்கு வருவதற்கு சற்று முன்னர் அங்கு வந்து பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன் ”சிசிடிவி காட்சிகளை வைத்தும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காரை ஓட்டிச் சென்றவரின் உடல் முழுமையாக சிதைந்துள்ளதால் அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.காவல்துறை மற்றும் தடயவியல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.

    Post Views: 94

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    Leave A Reply Cancel Reply

    October 2022
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    • “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version