ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    விளையாட்டு

    கத்தாரில் ஆஸ்திரேலிய அணியை சிலிர்க்க வைத்த ‘மந்திரக்காரர்’ மெஸ்ஸி மெஸ்ஸி

    AdminBy AdminDecember 5, 2022No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘அவர் வியக்கத்தக்கவர், தலைசிறந்த ஆட்டக்காரர்’ என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியைப் புகழ்ந்திருப்பவர் அவரது ரசிகரோ, அவரது அணி வீரரோ அல்ல.

    கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுடன் மோதித் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட்.

    “அவர் தலைசிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதில் எங்களது வீரர்கள் சிறப்பாகச் செல்பட்டார்கள். ஆனால் முடியவில்லை. அவர் அற்புதமானவர் ” என்று கூறியிருக்கிறார் கிரஹாம்.

    பந்தைக் காலால் கடத்தியபடி மெஸ்ஸி தொலைக்காட்சித் திரைகளில் தோன்றும்போது அவரை ‘மந்திரக்காரர்’ என்று வர்ணணையாளர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது.

    “ஒரு அங்குல இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாகப் பந்தைக் கோலுக்குள் கொண்டு செல்லும் திறன் படைத்தவர் மெஸ்ஸி” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று கூறுகிறது.

    ஆஸ்திரேலியா vs அர்ஜென்டினா

    ஆஸ்திரேலியாவுடன் அர்ஜென்டினா முன்னிலை பெறுவதற்காக மெஸ்ஸி அடித்த முதல் கோல், ஒரு குறுகிய இடைவெளியில், ஆஸ்திரேலியாவின் பல கால்களுக்கு இடையே அடிக்கப்பட்டதுதான்.

    ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மெஸ்ஸிதான் அதிகமான ரேட்டிங் பெற்ற வீரர். அவ்வளவு ஏன், கிடைத்தற்கரிய பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட போலந்து அணியுடனான போட்டியில்கூட அவருக்குத்தான் அதிகப் புள்ளிகள் கொடுத்திருந்தார்கள்.

    “நான் மாரடோனா ஆடியபோது அவருக்கு எதிராக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது மெஸ்ஸி ஆடும் அணிக்கு எதிராக பயிற்சியளிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இருவரும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களைப் பெற்றதற்காக அர்ஜென்டினா பெருமைப்பட வேண்டும்” என்று கூறுகிறார் கிரஹாம் அர்னால்ட்.

    உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சௌதி அரேபிய அணியுடன் தோற்று நெருக்கடிக்கு உள்ளான அர்ஜென்டினா அணி அதன் பிறகு அடுத்தடுத்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும்.

    மெஸ்ஸி

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெஸ்ஸி செய்தது என்ன?

    ஃபிபா தரவரிசையில் அர்ஜென்டினா அணி மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 38-ஆவது இடத்திலும் இருக்கின்றன.

    அதனால் இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் கணிக்கப்பட்ட பலவும் நடக்காமல் போயிருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் திருப்பங்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    தொடக்கத்தில் இருந்தே பந்தை அதிகமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டினா அணிக்கு அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன.

    ஆனால் 35-ஆவது நிமிடத்தில் ப்ரீகிக் மூலம் கிடைத்த பந்து ஆஸ்திரேலிய கோலுக்கு அருகே சென்று மீண்டும் மெஸ்ஸியிடமே திரும்பி வந்தது.

    அதை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கடத்திச் சென்ற மெஸ்ஸி, பல ஆஸ்திரேலிய வீரர்கள் சூழ்ந்து நிற்கும்போதே கோலுக்குள் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய கோல்கீப்பர் மிகவும் மோசமான ஒரு தவறைச் செய்தார். பாதுகாப்பு அரணில் நின்ற சக வீரர் அவருக்கு பந்தை அடித்தபோது, அதை கையால் பிடிக்காமல் காலால் தட்டிவிட முயன்றபோது, அது சற்று நழுவியது.

    அப்போது பந்துடனேயே ஓடி வந்து கொண்டிருந்த ஜுலியன் ஆல்வரெஸ் கோல்கீப்பரிடமிருந்து பந்தைப் பறித்து கோலுக்குள் அடித்தார். இந்தக் கோல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.

    64-ஆவது நிமிடத்தில் பாதியில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சில மீட்டர் தொலைவில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அதைத் தடுத்துவிட்டார்.

    அர்ஜென்டினா இரண்டு கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வளவு எளிமையாக விட்டுவிடவில்லை. 77-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கோலை நோக்கி அடித்த பந்து அர்ஜென்டினா வீரர் மார்டினஸின் காலில் பட்டுத் திரும்பி கோலுக்குள் சென்றுவிட்டது. இந்த கோல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை பிறந்தது.

    80-ஆவது நிமிடத்துக்குப் பிறகு இரு அணிகளுக்கும் கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி கோலுக்குள் அடிக்க முயன்ற பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் அற்புதமாகத் தடுத்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலுறுதிக்குள் நுழைந்தது.

    மெஸ்ஸிக்கு 1000-ஆவது போட்டி

    நாட்டுக்காகவும் கிளப்புக்காகவும் மெஸ்ஸி ஆடிய ஆயிரமாவது போட்டி இது. ஆனால் இதில் பெருமைப்படுவதற்குப் பதிலாக நிம்மதி அடைந்திருப்பதாகவே மெஸ்ஸி கூறுகிறார்.

    இரு நாள்களுக்கு முன்பு கடைசி லீக் போட்டியை ஆடிய நிலையில், நாக் அவுட் போட்டியில் ஆடியது உடலுக்கு வைத்த சோதனையாகவே கருதுவதாக அவர் கூறினார். போதுமான ஓய்வு எடுக்கவில்லை என்ற தகவலையும் அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு கோல் அடித்ததன் மூலம் மாரோடோனாவின் அதிக உலகக் கோப்பை கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை சமன் செய்திருக்கிறார்.

    இன்னும் ஒரு கோல் அடித்தால் 10 கோல் அடித்து முதல் இடத்தில் இருக்கும் கேப்ரியல் பாடிஸ்டுடாவின்வின் சாதனையை சமன் செய்ய முடியும்.

    2006-ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பை போட்டிகளில் மெஸ்ஸி ஆடி வருகிறார். அந்தப் போட்டியிலேயே தனது கோல் எண்ணிக்கையை மெஸ்ஸி தொடங்கினார்.

    2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

    2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 கோல்களையும், 2018-இல் ஒரு கோலையும் அடித்திருக்கிறார் மெஸ்ஸி. கத்தாரில் இதுவரை மூன்று கோல்களை அடித்திருக்கிறார்.

    Post Views: 89

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    வரலாற்றில் முதன் முறையாகக் கொடுக்கப்பட்ட ‘வெள்ளை அட்டை‘

    January 29, 2023

    இந்திய அணியை இறுதி வரை இழுத்துச் சென்ற சூர்யகுமார்: வெற்றியை கைப்பற்றிய இலங்கையின் பவர் பிளே

    January 6, 2023

    கால்பந்து மன்னர் பெலே காலமானார்

    December 30, 2022

    Leave A Reply Cancel Reply

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version