ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, March 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    AdminBy AdminFebruary 6, 2023No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.

    7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

    கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

    துருக்கியில் அதிகாரிகள் இதுவரை 76க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளனர். தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அடுத்த சில மணிநேரங்களில் பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

    பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

    காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.

    காசியான்டெப்பின் வடகிழக்கில் உள்ள மாலத்யா மாகாணத்தில் குறைந்தது 23 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிழக்குப் பகுதியிலுள்ள சான்லியுர்ஃபாவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தியர்பாகிர், ஓஸ்மானியே ஆகிய பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

    காசியான்டெப்புக்கு வடகிழக்கில் அமைந்துள்ள மலாத்யாவில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தால் நொறுங்கிய வாகனங்கள்

    அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய மாகாணங்களில் – 237 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 600க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    துருக்கியில் 284 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2,323 காயமடைந்துள்ளதாக துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

    துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

    காசியான்டெப்புக்கு வடகிழக்கில் அமைந்துள்ள தியர்பாகிரில் சேதமடைந்த கட்டடங்களில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் பல நூறு பேர் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது கடுமையான பருவநிலை காரணமாக மிகவும் சிரமமாக உள்ளது.

    தியர்பாகிரில் உள்ள பிபிசி துருக்கி செய்தியாளர், நகரத்திலுள்ள ஒரு வணிக வளாகம் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார்.

    சிரியாவில், அலெப்போ, ஹமா, லதாகியா ஆகிய பகுதிகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நடுக்கம் லெபனான், சைப்ரஸ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.
    துருக்கி நிலநடுக்கம்

    வடக்கு சிரியாவில், ஹாமா நகரில் பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் தரைமட்டமாகின.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள முகமது எல் சாமா என்ற மாணவர் பிபிசியிடம் பேசியபோது, “நான் எதையோ எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென்று முழு கட்டடமும் குலுங்கியது. என்ன செய்வது என்று என்னால் சிந்திக்க முடியவில்லை,” என்று தெரிவித்தார்.

    மேலும், “நான் ஜன்னலுக்கு அருகில் இருந்தேன். அதனால், அவை உடைந்துவிடுமோ என்று அஞ்சினேன். இது நான்கு-ஐந்து நிமிடங்கள் நீடித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

    இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் சிரிய மக்கள்

    காசா பகுதியில் உள்ள பிபிசி தயாரிப்பாளரான ருஷ்டி அபுவலூஃப், அவர் தங்கியிருந்த வீட்டில் சுமார் 45 விநாடிகள் நடுக்கம் ஏற்பட்டதாகக் கூறினார்.

    இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளதாக துருக்கிய நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கம் அப்பகுதியில் தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    துருக்கிய எல்லையில் அமைந்துள்ள அஹ்மரின் என்ற பகுதியில் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடும் பணியில் குடியிருப்புவாசிகள்

    துருக்கி உலகின் மிகவும் தீவிரமான நிலநடுக்க மண்டலங்களில் ஒன்று.

    1999ஆம் ஆண்டில், நாட்டின் வடமேற்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

     

     

    Post Views: 10

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஸ்ய சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு ஜெயில்

    March 29, 2023

    ஆப்கானிஸ்தானில் சோகம் – வெடிக்காத குண்டுகளுக்கு இரையான 700 குழந்தைகள்

    March 29, 2023

    தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ – எவ்வளவு மதிப்பு தெரியுமா?

    March 28, 2023

    Leave A Reply Cancel Reply

    February 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728  
    « Jan   Mar »
    Advertisement
    Latest News

    திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்

    March 30, 2023

    விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.

    March 30, 2023

    உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி

    March 30, 2023

    செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்

    March 30, 2023

    இலங்கையின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு – அரசாங்கம் என்ன சொல்கிறது?

    March 29, 2023
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • திருக்கடையூர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகர் செந்தில்
    • விகாரை, புத்தர் சிலை: நெடுந்தீவில் எதிர்ப்பு போராட்டம்.
    • உயிர்த்தஞாயிறு தாக்குதல் – சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளார்- மரபணுபரிசோதனை மூலம் உறுதி
    • செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • விஷம் கொடுப்பதற்கு முன் காதலன் ஷாரோனை உடலுறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. குற்றப்பத்திரிக்கையில் பகீர்
    • எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு
    • 75வயதில் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து சாதனைபடைத்த பாட்டியம்மா ! யாழில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்!- (வீடியோ)
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version