ஜனவரி மாதத்தில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் அதிகளாவனவர்கள் இந்தியர்கள் என்றும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Share.
Leave A Reply