கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தில் திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (1) மாலை இடம்பெற்றுள்ளது.

32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் நுழைந்த சில சந்தேக நபர்கள் இவரது மனைவியின் தங்க மாலையை திருடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இராணுவ சிப்பாய் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் இராணுவ சிப்பாயை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply