இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 நீல மாணிக்கக் கற்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் சுமார் 37 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவிலானது என தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply