மகனின் தாக்குதலில் 82 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இரத்தினபுரி, கொடகவெல, பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கபுமல் தெனிய பிரதேசத்தை சேர்ந்த பொடி நோனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக 50 வயதுடைய மகன் கூரிய ஆயுதத்தால் தனது தாயின் தலையில் அடித்ததால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply