மேல் கொமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் புதன்கிழமை (15) பிற்பகல் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை விடுதியை ஒட்டியுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு சடலம் மிதப்பதாக உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சடலத்தை பொலிஸார் அந்த சடலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைத் தடுக்க கயிற்றால் சடலத்தை கட்டியுள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும், தலவாக்கலை பொலிஸார், அந்த சடலம், நீர்த்தேக்கத்தில் கரை ஒதுங்கிய சடலமா? என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.