“உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் கீவ் நகரில் உள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறியதாவது, ரஷியா நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 42-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களில் தீ பற்றி எரிந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தத்திற்காக லண்டனில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதலானது நடந்துள்ளது.

ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியா உள்ளிட்ட பகுதிகளை உக்ரைன் விட்டுக் கொடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. “,

Share.
Leave A Reply