அநுராதபுரத்தில் எப்பாவல – கெக்கிராவை வீதியில் மிஹிதுபுர பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (28) மாலை 04.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த வாகனம் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது முன்னால் பயணித்த கெப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கெப் வாகனத்தில் பயணித்த 9 பேரும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply