பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் இன்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 36 வயதான தர்சன் சத்தியா என்பவராவார்.
கணவன் கனடா நாட்டில் உள்ளதாகவும் மேற்படி பெண்ணும், மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர்.
கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.