இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், ”அமெரிக்காவின் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன” என கூறியுள்ளார்.
பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ள டிரம்ப், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பொதுவான நாட்டில் பரந்த அளவிலான பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள்” என அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடம் தானும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸும் கடந்த 48 மணிநேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவும் பாகிஸ்தானும் ‘நிலம், வான் மற்றும் கடல் வழி’ தாக்குதலை இந்திய நேரப்படி மாலை 5:00 மணி முதல் நிறுத்தும் என கூறியுள்ளார்.