யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறை பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன மீனவர் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் உள்ளிட்டவர்கள் திங்கட்கிழமை (02) மாலை மீன்பிடிக்க சென்றபோது பின் அணியத்திலிருந்து குறித்த நபர் கடலில் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

காணாமல் போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply