இரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட சிதறல்கள் காரணமாக, பென் குரியோன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று தனியார் ஜெட்டுகள் சேதமடைந்தன.

இதையடுத்து, இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம் வெளிநாட்டு விமானங்களில் அனுமதிக்கப்படும் பயணிகள் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது என்று எபிரேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய (wide-body) விமானங்களில் ஒரு விமானத்திற்கு அனுமதிக்கப்படும் பயணிகள் எண்ணிக்கை 130 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, அமெரிக்காவுக்கு செல்லும் நீண்ட தூர விமானங்களுக்கு 260–270 பயணிகள் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது என்று Ynet தெரிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து சனிக்கிழமை இரவு வரை நீடிக்கும் என்று Channel 12 தெரிவித்துள்ளது.

சிறிய (narrow-body) விமானங்களில் ஒரு விமானத்திற்கு 120 பயணிகள் என்ற தற்போதைய வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.

பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கியதையடுத்து, இஸ்ரேலின் வான்வழி பெரும்பாலும் வர்த்தக விமானங்களுக்கு மூடப்பட்டிருந்தது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இஸ்ரேலியர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரவும், நாட்டுக்குள் உள்ள பயணிகள் வெளியேற உதவவும், பென் குரியோன் விமான நிலையம் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டது.

இப்போது, இஸ்ரேலிய விமான நிறுவனங்களான El Al, Arkia, Israir மற்றும் Air Haifa ஆகியவற்றின் விமானங்களுக்கே வரையறுக்கப்பட்ட உள்நுழைவு மற்றும் வெளியேறும் சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply