வாஷிங்டன்: உலகின் மிக விலையுயர்ந்த போர் கப்பலான ‘யு.எஸ்.எஸ் ஜெரால்டு ஆர் ஃபோர்டு’ (USS Gerald R. Ford) திடீரென போர்க்களத்தில் இருந்து பின்வாங்கப்பட்டிருப்பது,
சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யு.எஸ்.எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) என்பது அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதீதத் திறன்கொண்ட ஒரு ‘மிதக்கும் போர் தளம்’ ஆகும். சுமார் 13 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பல், நவீன மின்காந்த விமான ஏவுதள அமைப்பு (EMALS) மற்றும் மேம்பட்ட ஆயுதத் தளவாடங்களை கொண்டுள்ளது,
யு.எஸ்.எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) என்பது அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதீதத் திறன்கொண்ட ஒரு ‘மிதக்கும் போர் தளம்’ ஆகும்.
சுமார் 13 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பல், நவீன மின்காந்த விமான ஏவுதள அமைப்பு (EMALS) மற்றும் மேம்பட்ட ஆயுதத் தளவாடங்களை கொண்டுள்ளது,
இது பழைய காலத்து நீராவியால் இயங்கும் அமைப்புகளை விடவும் மிக வேகமாகப் போர் விமானங்களை விண்ணில் ஏவ வழிவகை செய்கிறது.
சுமார் 1,100 அடி நீளமும், ஒரு லட்சம் டன் எடையும் கொண்ட இந்த ராட்சதக் கப்பல், ஒரே நேரத்தில் 75-க்கும் மேற்பட்ட போர் விமானங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
ஈரானுடனான தற்போதைய பதற்றமான சூழலில், மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் காட்டும் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த இக்கப்பல், தொடர்ச்சியான போர்ப் பணிகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகப் பராமரிப்புக்காகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது,
உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 13 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்!) செலவில் உருவாக்கப்பட்ட இந்த ‘மிதக்கும் கோட்டை’, ஈரானுடனான மோதல் உச்சத்தில் இருக்கும் வேளையில் திடீரென பராமரிப்புப் பணிகளுக்காகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் கடற்படை வலிமை குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
என்ன நடந்தது? – ஒரு ‘சலவை அறை’ மர்மம்!
கடந்த சில மாதங்களாகவே ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளுக்கு எதிராகக் கடும் தாக்குதல்களை நடத்தி வந்தது இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல். ஆனால், தொடர்ச்சியான போர்ப் பணிகளால் கப்பலின் உள் அமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கப்பலில் ஏற்பட்ட ஒரு ‘லவுண்டரி ஃபயர்’ (Laundry fire) அதாவது சலவை அறையில் ஏற்பட்ட தீ விபத்துதான் இந்தத் திடீர் பின்வாங்கலுக்கு உடனடி காரணமாக சொல்லப்படுகிறது.
“வெறும் துணி துவைக்கும் இடத்தில் ஏற்பட்ட தீயால் ஒரு பிரம்மாண்ட போர்க்கப்பலே முடங்குவதா?” என சமூக வலைதளங்களில் கிண்டல்கள் கிளம்பினாலும், அதன் பின்னணியில் ஈரானின் இடைவிடாத பதிலடித் தாக்குதல்கள் ஏற்படுத்திய அழுத்தமே முக்கியக் காரணம் என்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.
ட்ரம்ப்பின் ‘மூவ்’ – சமாதானமா? பின்னடைவா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்கிற சமிக்ஞைகளை ஒருபுறம் வெளியிட்டு வருகிறார்.
அதே வேளையில், அமெரிக்காவின் மிக நவீனமான போர் ஆயுதமே இப்படித் தற்காலிகமாகச் செயலிழந்திருப்பது ஈரானுக்குக் கிடைத்த ஒரு ‘தார்மீக வெற்றியாகவே’ பார்க்கப்படுகிறது.
முக்கியப் பாதிப்புகள்: தொடர்ச்சியான தாக்குதலால் கப்பலின் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தேய்மானம்.
அதிநவீன தொழில்நுட்பங்கள் என்பதால் பராமரிப்புக்குத் தேவைப்படும் கூடுதல் காலம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படையின் கண்காணிப்புத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவு.
“எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைய நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்” என ஈரான் ஆதரவு ஊடகங்கள் இந்தப் செய்தியைக் கொண்டாடி வருகின்றன.
மின்னல் வேகத் தாக்குதலுக்குப் பெயர் போன இந்த ‘ஃபோர்டு’, மீண்டும் கடலுக்குத் திரும்பப் பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. அதுவரை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ‘பவர்’ என்னவாகும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

