யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் கடந்த புதன்கிழமை (29.04.2026) இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞன் ஒருவனே இந்த மோசமான செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபரான இளைஞனைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவர்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

