யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. குருநகர் தேவாலயம் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், ஒரு நண்பர் மற்றவரின் தலையில் மதுப் பாட்டிலால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த 36 வயதுடைய நபர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குருநகரைச் சேர்ந்த சந்தேகநபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply