சென்னை: மத்திய கிழக்கில் யுத்த மேகங்கள் கறுத்து திரண்டு வரும் நிலையில், இதுவரை “யாராலும் வெல்ல முடியாது” என்று மார்தட்டிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கு ஈரான் ஒரு மிகப்பெரிய ‘செக்’ வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக அரங்கேறி வரும் சம்பவங்கள், உலக நாடுகளின் ராணுவப் பார்வையையே புரட்டிப் போட்டுள்ளன.
THAAD-க்கு வைத்த குறி!
அமெரிக்காவின் பெருமையான ‘தாட்’ (THAAD) ஏவுகணைத் தடுப்பு அமைப்பைத் தகர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல.
ஆனால், சமீபத்திய மோதலில் இந்த அமைப்பின் செயல்பாட்டையே ஈரான் முடக்கிப் பார்த்திருக்கிறது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி, தாட் அமைப்பின் ‘இன்டர்செப்டர்’களை (Interceptor) திசைதிருப்பிய ஈரான், அதன் முக்கிய மையங்களைச் சேதப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இரும்புக்கோட்டை ‘அயர்ன் டோம்’ (Iron Dome) சிதைந்ததா?
உலகமே வியந்து பார்த்த இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு அமைப்பு, இந்த முறை ஈரானின் தாக்குதலில் தடுமாறிப்போனது.
குறைந்த விலையிலான ட்ரோன்களைக் கொண்டு அயர்ன் டோமின் கவனத்தைச் சிதறடித்து, பின்னால் பாய்ந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நிலைகளைத் தாக்கியுள்ளன.
இது வெறும் தாக்குதல் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியாக ஒரு மிகப்பெரிய ஆதிக்கம் என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள்.
‘AN/FPS-132’
1 பில்லியன் டாலர் ராடார் காலி!
கத்தாரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் மிக முக்கிய ‘AN/FPS-132’ ராடார் தளம் தற்போது பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 9,000 கோடி ரூபாய்!). அமெரிக்காவின் ‘கண்’ என்று அழைக்கப்படும் இந்த ராடார் சிஸ்டத்தை ஈரான் தகர்த்தது, அமெரிக்கப் படைகளுக்கு விழுந்த பலத்த அடி.
போர்க்கப்பலும்… F-35 ரகசியமும்!
கடலில் நின்றிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவிய தற்கொலை படை ட்ரோன்கள் உரசிச் சென்றதில் கப்பல் சேதமடைந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, உலகின் மிகச் சிறந்த போர் விமானமாகக் கருதப்படும் F-35 விமானமே ஈரானின் தாக்குதலில் சேதமடைந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. “ஸ்டெல்த்” (Stealth) தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தையும் வீழ்த்த முடியும் என ஈரான் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
அடுத்த குறி B-2 பாம்பர் விமானமா?
அமெரிக்காவின் அடுத்தகட்ட ஆயுதமான B-2 ஸ்பிரிட் (B-2 Spirit) ரக குண்டுவீச்சு விமானங்கள் இப்போது களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், F-35 விமானத்திற்கே இந்த நிலை என்றால், B-2 விமானத்தின் கதி என்னவாகும் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி.
உலகம் கற்கும் பாடம்!
அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டின் அதிநவீன ராணுவத் தளவாடங்களை, மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு எப்படித் தகர்க்கலாம் என்பதை ஈரான் தற்போது உலகிற்குப் பாடம் எடுத்து வருகிறது.
அமெரிக்கா என்பது வீழ்த்த முடியாத சக்தி இல்லை.. அதை சிறிய நாடான நாங்களே வீழ்த்துவோம் என்பதை வியட்நாமிற்கு பின் ஈரான் இப்போது நிரூபித்துள்ளது! இது வெறும் போர் அல்ல, புதிய காலத்திற்கான ‘அசிமெட்ரிக் வார்ஃபேர்’ (Asymmetric Warfare)!

