தினகரன் மகள் திருமணம்: சசிகலா, நடிகர் பிரபு உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெறுகிறது.
இந்தத் திருமண விழாவில் சசிகலா, நடிகர் பிரபு குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவிருந்ததாலும், உறவினர்கள், கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும் கடைசி நேரத்தில் திருமண மண்டபத்திலேயே திருமணம் நடைபெற்றது.
இன்று காலை மிகச் சரியாக 7:45 மணிக்கு மணமேடைக்கு வந்தார் மணமகன். அவரைத் தொடர்ந்து மண்டபத்துக்கு வந்த சசிகலாவும் இளவரசியும் மேடையின் வலதுபுறம் தனி இருக்கைகளில் அமர்ந்தனர்.
தினகரன் மகள் திருமணம்
வேலூர் பொற்கோவில் தலைவர் ரமணியம்மா தாலியை ஆசீர்வதித்து எடுத்துக்கொடுக்க, சசிகலா முன்னிலையில் மிகச்சரியாக 9:25 மணிக்கு திருமணம் நடைபெற்றது.
தினகரன் மகள் திருமணம்
சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்: நடிகர் பிரபு உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டு வாழ்த்து!