எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­திய பெரு நிலமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்சியம் பகர்­கின்­றது. அது மட்­டு­மல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு கடலால் பிரிக்­கப்­பட்­டி­ருந்த இலங்­கைக்கு பாலம் அமைத்­தார்கள் என இரா­மா­யணம் கூறு­கின்­றது.

ஏறக்­கு­றைய இரண்­டா­யிரம் ஆண்­ட­ளவில் சிங்­க­ள­வர்­களின் மூதா­தையர்கள் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­தார்கள். அவ்­வாறே தமி­ழர்­களின் மூதாதை­யர்­களும் இந்­தி­யா­வி­லி­ருந்தே வந்­தார்கள். புத்த மதமும், இந்து மதமும் இந்­தி­யா­வி­லி­ருந்தே இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டன.

பூகோள ரீதி­யாக தென் இந்­தி­யாவில் குறிப்­பாக தமிழ் நாட்டில் ஏற்­படும் பூமி அதிர்ச்­சியின் அதிர்­வ­லைகள் இலங்­கையில் உண­ரப்­படும். இந்­தி­யா­விற்கும் இலங்­கைக்கும் இறுக்­க­மான சமு­தாய உற­வுகள் பல­வுண்டு.

தமிழ் நாட்டு உறவு

தமிழ் நாடு தமி­ழர்­களின் தாய­க­மாகும். ஏறக்­கு­றைய ஆறு கோடி தமி­ழர்­களின் வதி­வி­ட­மாகும். இலங்­கையில் வாழும் தமி­ழர்­க­ளுடன் தொப்புள் கொடி உறவு கொண்­ட­வர்கள். இலங்கை தமி­ழர்­க­ளுக்கு தீங்கு ஏதும் நடந்தால் தமிழ் நாடு கொதித்து எழும். பல­வித போராட்­டங்கள் நடத்தப்படும்.

இந்­திய மத்­தி­ய­ அர­சிற்கு பல­வகை அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­துவர். அதனால் இந்­திய மத்­தி­ய அ­ரசு தான் நினைத்­த­படி ஆட முடி­யாமல் போவதும் உண்டு.

மீனிற்கு வாலையும் பாம்­புக்கு தலை­யையும் காட்டும் விலாங்கின் குணம் படைத்த அர­சி­யலில் இந்­திய மத்­தி­ய­ரசு பய­ணிப்­ப­து­முண்டு. எது என்­ன­வாக இருந்­தாலும் எப்­பொ­ழுதும் எவ்­வி­டத்­திலும் இந்­தி­யாவின் நல­வு­ரி­மையை பேணிக்­காப்­ப­துவே அதன் முதன்­மை­யான அர­சியல் நிலைப்­பா­டாகும்.

showImageInStoryமேலே விப­ரித்த அர­சியல் சூழ்­நி­லையில் தான் இலங்கை-இந்திய உடன்­ப­டிக்­கை­ கைச்சாத்திடப்பட்டது. (indo srilanka agreement) அவ்­வாறே இந்­திய நல­வு­ரி­மையை பேணிக்­காப்­ப­தற்­காக எழு­தப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யாகவே இது திகழ்கிறது.

உடன்­ப­டிக்­கை­யுடன் கடி­தங்கள்

இந்­திய பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­பதி ஜெய­வர்த்­த­னா­விற்­கு­மி­டையில் கடி­தங்கள் பரி­மா­றப்­பட்­டன. அவை­யாவும் உடன்­ப­டிக்­கையின் பகு­தி­யா­கவும் பாக­மா­கவும் கணிக்­கப்­பட்­டன. அக் கடி­தங்­களில் முக்­கி­ய­மாக மூன்று விட­யங்கள் குறிக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன. அவை­யா­வன

1. இந்­தி­யாவின் நல­வு­ரி­மை­க­ளுக்கு பாத­க­மாக திரு­கோ­ண­மலை துறை­முகம் மற்றும் இலங்­கையின் துறை­மு­கங்கள் யாவும் இரா­ணுவ பாவனைக்கு வேறு எந்த நாடும் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக கொடுக்­கப்­ப­டாது.

2. திரு­கோ­ண­மலை எண்ணெய் குதங்கள் திருத்­துதல், செயல்­ப­டுத்­துதல் ஆகி­யன யாவும் இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து கூட்டு முயற்­சி­யாக செயற்­பட வேண்டும்.

3. வெளி­நாட்டு வானொலி அமைப்­புக்­க­ளுடன் இலங்கை ஏற்­ப­டுத்திக் கொண்ட ஒப்­பந்­தங்கள் மீளாய்வு செய்­யப்­பட்டு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு பாது­காப்புச் செய்­யப்­பட வேண்டும்.

அவர்­களால் இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்­டவை பொது­மக்­களின் பாவ­னைக்­கான ஒலி­ப­ரப்­பாக இருக்க வேண்­டு­மே­யன்றி இரா­ணுவ புல­னாய்வு விட­யங்­க­ளுக்கு உப­யோ­கிக்­கவே கூடாது.

மேலே விப­ரிக்­கப்­பட்­டுள்ள மூன்று விட­யங்­களும் இந்­தி­யாவின் பாது­காப்­புக்­கு­ரிய முக்­கிய விட­யங்கள். இந்­தி­யாவின் பாது­காப்பு இந்­தி­யாவின் நல­வு­ரி­மை­யாகும்.

இலங்கை தமி­ழர்­களின் அர­சியல் உரி­மைகள் பாது­காப்பு யாவும் பின் தள்­ளப்­பட்­டன. இந்­தி­யாவின் பாது­காப்­பிற்­காக இலங்கை தமி­ழர்­களின் உரி­மைகள் பலி கொடுக்­கப்­பட்­ட­வையே.

உடன்­ப­டிக்­கையின் பிரிவு 2: 15

உடன்­ப­டிக்­கையின் பிரிவு 2: 15 மிக முக்­கி­ய­மா­னது. அப்­பி­ரிவு என்ன கூறு­கின்­றது? அப்­பி­ரிவு திட்­ட­வட்­ட­மாக பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. 04.08.1986 தொடக்கம் 19.12.1986வரையும்  கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டு தீர்­மானம் எடுக்­காத  மிகுதிப் பிரே­ர­ணைகள் முடி­வெ­டுக்­கப்­பட்டு அவற்றை ஏற்றுக் கொள்­வ­தென்ற நிபந்­த­னைக்­க­மைய இப் பிரே­ர­ணைகள் ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­திட்ட ஆறு கிழ­மைக்குள் மேற்­கு­றித்த காலத்தில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு ஏற்ப இந்­தி­யாவும் இலங்­கையும் தீர்க்­க­மான முடிவை எட்­டு­வார்கள்.

இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா தனது நேரடி ஒத்­து­ழைப்பை வழங்கும். மேற்­கு­றித்த காலத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமை­வா­கவே இந்­திய ஒத்­து­ழைப்பு இருக்கும்.

2:15 these proposals are also conditional to an accepance of the proposals negotiated from 04.05.1986 to 19.12.1986. residual matters not finalised during the above negotiations shall be resolved between india and sri lanka within a period of six weeks of signing This agreement. these proposals are also conditional to the government of india co -– operating directly with the Government of sri lanka in their implementation.

04.05.1986 தொடக்கம் 19.12.1986 வரை­யு­முள்ள காலப்­ப­கு­திக்குள் கலந்து ஆலோ­சித்து தீர்வு எடுக்க முடி­யாமல் போன விட­யங்­க­ளுக்கு உடன்படிக்கை கைச்­சாத்­திட்ட 6 கிழ­மைக்குள் தீர்வு எட்­டப்­ப­டு­மென்று கூறப்­பட்­டுள்­ளது.

ஆறு கிழ­மைக்குள் தீர்க்­க­மான தீர்வு எட்­டிய பின் உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திட்­டி­ருக்­கலாம் தானே. ஆக்கப் பொறுத்­தவர் ஆறப் பொறுக்கக் கூடாதா? உடன்­ப­டிக்­கையில் விப­ரித்­த­வாறு ஆறு கிழ­மைக்குள் எவ்­வித தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை.

6 கிழமை 13.09.1987 இல் முடி­விற்கு வரு­கின்­றது.

13.09.1987வரையும் எவ்­வித முயற்­சி­க­ளையும் இந்­தியா எடுத்­த­மைக்கு ஆதாரம் இல்லை. இவற்றை இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்­துக்குள் சேர்க்­க­வில்லை. மாகாண சபைகள் சட்­டத்தில் சேர்க்­க­வில்லை.

இவற்­றிற்கு  தீர்க்­க­மான முடிவு எதுவும் எடுக்­காது இலங்கை அர­சாங்கம் மேற்­கூ­றிய இரு சட்­ட­மூ­லங்­களை வெளி­யிட்­டதை இந்­தியா எவ்­வாறு அனு­ம­தித்­தது? 13ஆவது திருத்தம் கொண்டு வந்­தது போல இத்­தீர்­மா­னங்­களை உள்­ள­டக்கி இன்­னுமோர் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் கொண்டு வரப்­ப­ட­வில்லை?

இன்று வரை 04.05.1986தொடக்கம் 19.12.1986 வரையும் கலந்தாலோ­சித்த விட­யங்கள் எவை, என்ன தன்மை கொண்­டவை விட­யப்­பொ­ருள்கள் என்ன என்று  இந்­திய மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தவே இல்லை. முற்று முழு­தாக அவற்றை கைவிட்­டது இந்­தியா. எவ­ரிற்கு நன்மை செய்­தது இந்­தியா? தமி­ழர்­க­ளுக்கா அல்­லது பௌத்த சிங்­கள மேலா­திக்கம் கொண்ட இலங்கை அர­சிற்கா நன்மை ஏற்­பட்­டது?

எல்லா வகை தீர்­மா­னங்­க­ளையும் செயல் வடிவம் கொடுப்­ப­தற்கு ”இந்­தியா அண்ட நைட்” காப்­பு­றுதி செய்­துள்­ளது. அந்த காப்­பு­று­தி­யையும் காற்­றிலே பறக்க விட்­டது இந்­தியா. தமி­ழர்­களின் உரி­மையை நசுக்கி மழுங்கச் செய்து அழித்து அவர்கள் நட்­டாற்றில் தள்­ளி­வி­டப்­பட்­டார்கள். அப்­பாவித் தமி­ழர்கள் ஆயிரக் கணக்கில் அழிந்த பின் கூட இந்­தியா சரி­யான திசைக்கு திரும்­பவே இல்லை.

உடன்­ப­டிக்­கையின் பிரிவு 2: 14

பிரிவு 2 : 14 பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது. the government of india will under wright and guarantee the resoluations and co – operate in the implementation of these proposals

இந்­திய அர­சாங்கம் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு திட­சங்­கற்பம் கொண்­டுள்­ளது. அத்­தோடு உத்­த­ர­வா­தமும் அளிக்­கி­றது. இந்தப் பிரே­ர­ணை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைப்பும் வழங்­கு­கின்­றது என கூறப்­பட்­டுள்­ளது. ஆனால் செயலில் இந்­தியா மயான அமைதி காத்து நிற்­கின்­றது.

இரா­மா­ய­ணத்தில் வாலி­வதை படலம் வரு­கின்­றது. வாலி­யுடன் நேர் நின்று யுத்தம் செய்து வெல்ல முடி­யாது. ஆனால் நேர் நின்று யுத்தம் செய்தால் நேர் நின்று யுத்தம் செய்­ப­வரின் பலத்தில் சக்­தியில் அரைப்­பங்கு வாலிக்கு சென்று விடும்.

அதனால் இராமன் மறைந்து நின்­றுதான் வாலிக்கு அம்­பெய்­தான். இலங்­கையில் அக்­காட்சி மாற்றம் அடை­கின்­றது. இராமன் இந்­திய மத்­தி­ய அ­ர­சா­கவும் வாலி பௌத்த சிங்­கள மேலா­திக்கம் கொண்ட இலங்கை அர­சா­கவும் சுக்­கி­ரீவன் தமி­ழர்­க­ளா­கவும் தோற்றம் பெறு­கின்­றார்கள்.

இந்­திய வல்­ல­ரசு நாடாகத் தோன்­றி­னாலும் இச்­சி­றிய இலங்­கையின் இரா­ஜ­தந்­திர அர­சியல் நகர்­வு­களால் மழுங்­க­டிக்­கப்­ப­டு­கின்­றது. உதாரணங்கள் பல­வுண்டு. விரி­விற்­கஞ்சி இங்கு விப­ரிக்­கப்­ப­ட­வில்லை.

தமி­ழர்­களின் பிரச்­சி­னையிலும் இந்­தியா மறைந்து நின்­றுதான் செயல்­ப­டு­கின்­றது. அவர்கள் செய்யும் அர­சியல் யுத்த செயல்­பா­டு­களால் காக்கப்­பட வேண்­டிய சுக்­கி­ரீ­வ­னான தமி­ழர்கள் படு­கா­ய­ம­டைந்து மர­ணித்து நாதி­யற்­ற­வர்­க­ளாக உரு­மாறி விட்­டார்கள்.

13வது திருத்­தமும் மாகாண சபையும்

13ஆவது அர­சி­ய­ல­மைப்பின் திருத்­தத்தின் மூலமும் மாகாண சபைகள் சட்­டத்தின் மூலமும் மாகாண சபைகள் அமைக்­கப்­பட்­டன. காய்தல், உவத்தல் இன்றி வெறுப்பு விருப்­பின்றி மாகாண சபைக்­கான அதி­கா­ரங்­களை அல­சிப்­பார்த்தால் எவ்­வித அதி­கா­ரங்­களும் மாகாண சபைக்கு கொடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெளி­வாகும்.

மாகாண சபை அர­சாங்­கத்தின் ஓர் முகவர் நிலை அந்­தஸ்த்தை பெற்­றுள்­ளது. முக­வ­ரா­கவே செயல்­ப­டு­கின்­றது. அவ்­வாறு செயல்­பட வேண்டும். மாகாண சபைக்கு அளிக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் அதி­கா­ரங்கள் எத­னையும் மாகாண சபை சுய­மாக சுதந்­தி­ர­மாக செயல்­ப­டுத்த முடியாது.

ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள் ஆளுநர், அமைச்சு செய­லாளர் கொடுக்­கின்ற பிச்சையைத்தான் மாகாண சபை ஏற்க வேண்டும். இவர்கள் மாகாண சபைக்கு அதி­கா­ரங்­களைக் கொடுக்­கலாம். எடுக்­கலாம்.

குறைக்­கலாம். மழுங்­க­டிக்­கலாம். ஒரு­கையால் கொடுத்­ததை மறு­கையால் அக்­க­ணமே எடுத்து விடலாம். காலையில் கொடுத்­ததை மாலையில் எடுக்­கலாம். மாகாண சபையால் இவற்­றிற்கு எதி­ராக ஒன்­றுமே செய்து விட முடி­யா­தது.

இந்­திய அர­சியல் முறைமை

இந்­திய அர­சியல் முறைப்­படி அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்தே நேர­டி­யாக மாநி­லங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் அளிக்­கப்­பட்­டுள்­ளன. மாநி­லங்­க­ளுக்­கென வரை­ய­றுத்­துக்­கொ­டுக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை நேர­டி­யாக செயல்­ப­டுத்த முடியும்.

இந்­திய ஜனா­தி­பதி பிர­தமர் அமைச்­சர்கள் ஆளுநர் செய­லா­ளர்கள் இவர்கள் போன்­ற­வர்­களின் கரு­ணையால் மாநி­லங்கள் இயங்­க­வில்லை. மாகாண சபையும் அவ்­வாறு செயல்­ப­டு­வ­தற்­கான செயல்­பா­டு­களை இந்­தியா செய்­ய­வில்லை.

இப்­பொ­ழுது இந்­தியா பகி­ரங்­க­மா­கவே கூறு­கின்­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரை இலங்கை அர­சாங்­கத்­துடன் கதை­யுங்கள். மாகாண சபைக்­கான அதி­கா­ரங்­களை ஜனா­தி­ப­தி­யுடன் கதைத்துப் பெற்றுக் கொள்­ளுங்கள் என்று கூறி தனது இய­லா­மையை தெரிந்தோ, தெரி­யா­மலோ வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தி­யாவில் ஆட்­சியில் இருக்கும் காங்­கிரஸ் கட்சி.

Portland_Chinese_Garden_2சீனாவில் சிறு­பான்மை இனங்கள்

ஐரோப்­பா, அமெ­ரிக்கா, கனடா போன்ற நாடு­களின் சட்­டங்­களில் வரை­யப்­பட்­டுள்ள சிறு­பான்மை காப்­பு­களை அல­சிப்­பார்க்­கின்றோம். ஆனால் சீனாவில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள காப்­பு­களை எட்டி நின்றும் பார்ப்­ப­தில்லை.

சீனா கம்­யூ­னிச சர்­வா­தி­கார நாடு. என்ன அங்கு நடக்­கின்­றது என யாரும் நுழைந்து பார்க்க முடி­யாது என்ற எண்ணம் பல­ரது மனத்தில் பதிந்­துள்­ளது. அதனால் சீனாவில் சிறு­பான்மை மக்கள் கேவ­ல­மாக நடத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்ற தவ­றான எண்ணம் பல­ரது மன­திலும் உள்ளது. உண்மை அவ்­வாறு இல்லை என்­பதே உண்­மை­யாகும்.

சீனாவில் 155க்கு மேற்­பட்ட சிறு­பான்மை இனத்­த­வர்கள் வாழ்­கின்­றார்கள். அவர்­க­ளது உரி­மைகள் யாவும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் நன்றாகப் பேணி காப்­பாற்­றப்­ப­டு­கின்­றன. செயல் முறை­யிலும் எவ்­வித நழுவல் தளும்பல் இல்­லாமல் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

முக்­கி­ய­மாக மூன்று விட­யங்­களைப் பற்றி இப்­பொ­ழு­திற்கு விப­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

தமிழ் தேசிய மக்கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் Homeland என்­பது போல சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின் தாயகம் எனும் கொள்­கையை பேணி காப்­பாற்­று­கின்­றார்கள்.

“The Minority people became master of their homeland and their own destinies” சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு அவர்­களே எஜ­மானர் தங்­க­ளது தலை­வி­தியை அவர்கள் தீர்­மா­னிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கே உரிமை உண்டு.

ஒவ்­வொரு சிறு­பான்மை இனமும் தங்­க­ளுக்குள் முரண்­ப­டாமல் ஒரு இனம் மற்­றைய இனத்தை வீழ்த்­தாமல் ஒற்­று­மை­யாக அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்பதில் சீன அரசாங்கம் எல்லா வகையிலும் செயல்பாட்டையும் செய்து கொடுக்கும். இலங்கையில் அவ்வாறு செயல்படுத்துவதில்லை. சிறுபான்மை இனத்துக்குள்ளேயே பிரிவுகள் உருவாக் கப்படுகின்றன.

155 சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கும் Autonomous Regions தன்­னாட்சி பிர தேசங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளது மொழி, கலா­சாரம், பண்­பாடு, மத நம்­பிக்கை வழி­பா­டுகள் யாவற்­றையும் எவ­ரது தலை­யீடும் இன்றி அனு­ப­விக்­கலாம்.

தாயகக் கோட்­பாடு மிக முக்­கி­ய­மான கோட்­பா­டாக சீனாவில் பேணி காப் பாற்­றப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் தாயகம் (Homeland) என்­றாலே தனி நாடு என்­பது வேண்­டாத அர்த்தம் கொடுக்கப்­ப­டு­கின்­றது. சீனாவில் அவ்வாறு இல்லை.

சீன அரசியலமைப்பின் பிரகாரம் சிறுபான்மை மக்களுக்கு பலவித உரிமை களை காப்புகளை சீன அரசாங்கம் கொடுத்துள்ளது. சீனா இலங்கையின் தலை சிறந்த நட்பு நாடு.

சீனா இலங்கைக்கு பலவித உதவிகளை செய்கின்றது. அதனால் சீனாவில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் எவ்வாறு பேணிக்காத்து வளர்க்கப்படுகின்றதென்பதனை ஆராய்ந்து சீனா காட்டும் தீர்வை நாமும் ஏன் பின்பற்றக்கூடாது.

எல்லா வகை முயற்சிகளிலும் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினை, அவர்களது உரிமைகள் யாவும் அமைதி வழியில் தீர்க்க வேண்டிய கடப்பாடு பௌத்த சிங்கள தேசிய மக்களுக்குண்டு. செய்வார்களா?

-சீ.வி.வீவேகானந்தன்-

Share.
Leave A Reply