ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»பிரதான செய்திகள்»“பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”
    பிரதான செய்திகள்

    “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”

    adminBy adminAugust 3, 2014No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஆகி­யோரை அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்கை பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த்த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட கட்­டுரை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்துபு, ஜே.வி.பி. ஆகிய அர­சியல் கட்­சிகள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

    அத்­துடன் இச்­செயல் பொறுப்­பற்ற செயல் மாத்­தி­ர­மன்றி, இவ்­வா­றான அனு­பவ முதிர்ச்­சி­யற்ற போக்­கு­களே போர்க்­குற்றப் பொறுப்புக் கூறல் பிரச்­சினை மேலெ­ழவும் கார­ண­மாக அமைந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன,இது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி விடுத்­துள்ள அறிக்­கையில்,

    இந்­தியப் பிர­தமர் மோடி, தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தொடர்பில் பாது­காப்பு அமைச்சு தனது உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த­ளத்தில் கடந்த வாரம் அவ­தூறை உண்­டாக்கும் வகையில் வெளி­யிட்ட கட்­டு­ரை­யினால் தர்ம சங்­க­ட­மான நிலை உரு­வா­னது.

    இந்­திய உயர் மட்­டத்தில் இது குறித்து நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­தை­ய­டுத்து இலங்கை நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பை கோர வேண்­டிய இக்­கட்­டான நிலைக்கு தள்­ளப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 24 மணித்­தி­யா­லத்­திற்­குள்­ளாக குறித்த கட்­டுரை மற்றும் படம் தொடர்பில் இலங்கை மன்­னிப்புக் கோரி­யது.

    மேலும் தனது நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பு கோரு­தலில் அந்தக் கட்­டுரை இணை­ய­த­ளத்தில் அனு­ம­தி­யின்றி வெளி­யி­டப்­பட்­ட­தாக புதிய தக­வ­லொன்றும் கூறப்­பட்­டது. இது நாட்டின் பாது­காப்புத் துறையில் பொறுப்­பற்ற தன்மை காணப்­பட்­ட­மை­யையே எடுத்துக் காட்­டு­கி­றது.

    இந்த அனு­ப­வ­மற்ற நிலைப்­பாடே போர்க் குற்ற பொறுப்புக் கூறலில் பிரச்­சி­னைகள் மேலே­ழுந்­த­போது, இலங்­கையை சிக்­க­லுக்குள் அமிழ்த்­தின. மேலும் பாது­காப்பு அமைச்சில் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் அதன் அஜாக்­கி­ரத தன்­மையை கட்­டியம் கூறு­வ­தாக அமைந்­துள்­ளன.

    பாது­காப்பு அமைச்சு இந்த கேலி சார்ந்த நட­வ­டிக்கை மூலம் மன்­னிப்பை கோரி­யி­ருந்­தாலும் தகுந்த ஆதா­ரங்கள் இன்றி இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் அந்­நிய அர­சு­க­ளையும் அவ­ம­திப்­பிற்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

    ஒரு வகையில், இரா­ஜ­தந்­திர அம­ளியை இந்த நிகழ்வு தூண்­டிய போதும், இந்த மன்­னிப்பை உள்ளூர் ஆங்­கில இதழ்கள் வெளி­யி­டாமல் தவிர்த்­துள்­ளன. இலங்கை அர­சாங்­கத்தின் அதி­கார மைய­மாக விளங்கும் பாது­காப்பு அமைச்­சினால் தூண்­டப்­படும் அச்சக் கலா­சாரம் இதன் மூலம் விளங்­கு­கின்­றது.

    இந்த நிலையில் சட்­ட­வாட்சி, குற்­றங்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்கை என்­ப­ன­வற்றை அர­சாங்கம் மதிக்­கு­மென ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது. நீதி முறை­மையின் முறிவை அரசே சிறப்­பாக எடுத்­துக்­காட்­டு­கின்­றது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

    இதே­வேளை, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மற்றும் தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா ஆகி­யோரை அவ­தூ­றுக்­குட்­ப­டுத்தும் வகையில் பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட செய்­தி­யினால் உல­க­ளா­விய ரீதியில் இலங்­கைக்குப் பாரிய அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­துடன், இலங்கை – இந்­திய நல்­லு­ற­விலும் அது பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

    பாது­காப்பு அமைச்சின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ள­மொன்றில் இவ்­வா­றான செய்­தி­யொன்று தவ­று­த­லாக வெளி­யா­னது என்று பொறுப்­பற்ற வகையில் பதில் சொல்­வ­திலோ மன்­னிப்புக் கோரு­வ­திலோ எவ்­வித பய­னு­மில்லை. மாறாக, முறை­யான பாது­காப்பு மற்றும் இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான செயற்­பா­டு­களை இனி­யா­வது மேற்­கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

    பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­தள செய்தி தொடர்பில் இலங்கை இந்­தி­யா­விடம் பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யமை தொடர்பி்ல்  கருத்து தெரி­வித்த போதே அவர் இதனை தெரி­வித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

    இந்த அர­சாங்கம் உள்­நாட்­டிலும் சரி, சர்­வ­தேச மட்­டத்­திலும் சரி மிகவும் பொறுப்­பற்ற வகை­யி­லேயே நடந்து கொள்­கி­றது. இந்த நிலை­மை­யா­னது நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது.

    இவ்­வாறு பொறுப்­பற்ற வகையில் நடந்து கொண்­ட­மை­யி­னா­லேயே இன்று சர்­வ­தேச மட்­டத்தில் பாரிய அழுத்­தங்­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது மாத்­தி­ர­மல்­லாமல் வாய்ச்­ச­வு­டல்­க­ளாலும் வீண் பேச்­சுக்­க­ளாலும் மேலும் மேலும் பிரச்­சி­னை­களை தோற்­று­வித்து வரு­கி­றது.

    பாது­காப்பு அமைச்சு என்­பது மிகவும் முக்­கி­ய­மான ஓர் அமைச்­சாகும். அவ்­வா­றான முக்­கிய அமைச்­சொன்றின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ள­மொன்றில் ஒரு செய்தி வெளி­யான பின்னர் அந்த செய்­தி­யா­னது எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதைக் கூட அறிய முடி­யா­த­வர்­க­ளையே பாது­காப்பு அமைச்சு, முக்­கிய பொறுப்­புக்­களில் வைத்­தி­ருக்­கி­றது என்­பது கவ­லை­ய­ளிக்­கி­றது.

    ஒரு விட­யத்தை செய்­வ­தற்கு முன்னர் அதை பற்றி நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பின்­னரே அதனை செயற்­ப­டுத்த வேண்டும். அல்­லாமல் மன­துக்குப் பட்­ட­தை­யெல்லாம் சற்­றேனும் சிந்­திக்­காமல் நடை­மு­றையில் செயற்­ப­டுத்த முனைந்தால் விளைவு விப­ரீ­த­மா­கவே அமையும்.

    எமது அயல் நாடான இந்­தியா எப்­பொ­ழுதும் எமக்குத் தேவை­யான நாடாகும். அத­னுடன் முறை­யான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களைப் பேண வேண்டும். மாறாக, நாட்­டிற்குள் காட்டும் சண்­டித்­த­னங்­களை அவர்­க­ளிடம் காட்டக் கூடாது. அதனால் பாதிப்பு அவர்­க­ளுக்கு அல்ல எமக்கே.

    இந்­தி­யாவின் புதிய பிர­த­ம­ரான நரேந்­திர மோடி உலகம் ஏற்றுக் கொண்ட ஓர் அர­சியல் தலை­வ­ராகத் திகழ்­கிறார். அத்­தோடு தமி­ழக முதல்வர் என்­பதும் முக்­கி­யத்­து­வ­மான ஒரு பதவி.

    இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு அவ­தூறு ஏற்­படும் வகையில் பொறுப்­பு­வாய்ந்த ஒரு இணை­யத்­தளம் செய்தி வெளி­யி­டு­வது என்­பது மிகவும் பார­தூ­ர­மான செயற்­பா­டாகும். அது மாத்­தி­ர­மன்றி இலங்கை – இந்­திய நல்­லு­ற­விலும் அது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

    இந்த அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சிகள் சில இந்­தி­யா­வுக்கு எதி­ராகக் கடு­மை­யான விமர்­ச­னங்­களை மேற்­கொண்டு வரும் இந்த நிலையில் பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ள­மொன்று இவ்­வா­றான செய்தி வெளி­யிட்­டி­ருப்­பதை இந்­தியா சர்வ சாதா­ர­ண­மாகக் கரு­தாது என்­பது மாத்­திரம் உறுதி எனவும் அவர் தெரி­வித்தார்.

    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ சுமந்­திரன் கருத்து தெரி­விக்­கையில்,

    பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­தளம் வெளி­யிட்டு கட்­டு­ரைக்கு முழுப் பொறுப்­பையும் இலங்கை அர­சாங்­கமே ஏற்க வேண்டும். சர்ச்­கைக்­கு­ரிய கட்­டுரை மற்றும் படம் உரிய அதி­கா­ரி­களின் அனு­ம­தி­யின்றி வெளி­யி­டப்­பட்­டது என்று சாக்­குப்­போக்கு கூற­மு­டி­யாது.

    பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­தளம் இது போன்ற அவ­தூறு ஏற்­ப­டுத்தும் செய்­திகள், கட்­டு­ரை­களை வெளி­யி­டு­வது இது முதற் தட­வை­யல்ல.

    ஒரு முறை பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஒரு பத்­தி­ரி­கைக்கு எதி­ராக தொடர்ந்த வழக்கில் பத்­தி­ரி­கையின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­களின் புகைப்­ப­டங்­க­ளையும் வெளி­யிட்டு தேசத் துரோ­கிகள் என விமர்­சித்து கட்­டு­ரையும் வெளி­யிட்­டி­ருந்­தது. இணை­யத்­தளம் வெளி­யிட்ட சட்­டத்­த­ர­ணி­களின் புகைப்­ப­டங்­களில் என்­னு­டைய படமும் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

    பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­தளம் தொடர்ந்து இது போன்ற கட்­டு­ரை­களை வெளி­யி­டு­வது நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்து என்றும் எம்.ஏ.சுமந்­தி­ரனக் எம்.பி. தெரி­வித்தார்.

    ஜே.வி.பி. பிர­சார செய­லாளர் விஜித ஹேரத் எம்.பி. இது குறித்து கருத்து தெரி­விக்­கையில்,

    பாது­காப்பு அமைச்சின் இணை­ய­தளம் வெளி­யிட்ட கட்­டு­ரைக்கு இலங்கை இந்­தி­யா­விடம் மன்­னிப்புக் கோரி­யி­ருப்­பது இலங்­கையும் இலங்கை மக்­க­ளையும் இழி­வு­ப­டுத்தும் செய­லாகும்.

    அர­சாங்கம் தனக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யி­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு சேறு பூசும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வது இது முதன் முறை­யல்ல. அர­சாங்க சார்­பான இணை­யத்­த­ளங்கள் மற்றும் ஊட­கங்கள் சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை வழ­மை­யாக்கிக் கொண்­டுள்­ளன.

    இவ்­வாறு மன்­னிப்பு கோரு­வதன் மூலம் பாது­காப்பு அமைச்சின் இணை­ய­தளம் வெளி­யிடும் கட்­டு­ரைகள் செய்­திகள் மக்கள் மத்­தியில் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும். பொறுப்­பற்ற முறையில் செய்­தி­களை வெளி­யிட்டு அதன் பின்னர் பகி­ரங்க மன்­னிப்புக் கோரு­வது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமென்றும் அவர் தெரிவித்தார்.

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரீ.ஹஸனலி இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

    பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் வருவது. எனவே இந்த இணையத்தளத்தில் மன்னிப்பு கேட்குமளவுக்குக் கட்டுரை வெளிவந்துள்ள என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    வெளிநாடொன்றுடன் சம்பந்தப்பட்ட கட்டுரை என்பதால் இலங்கை அரசு மன்னிப்புக் கோரியுள்ளது. இதுவே உள்ளூர் நபர்கள் அல்லது அமைப்புக்களுக்கு எதிராக பொய்த் தகவல்களை வெளியிட்டிருந்தால் இவ்வாறு அரசு மன்னிப்புக் கோரியிருக்காது. அத்துடன் விமர்சனத்துக்குள்ளாகிய நபர்கள் அல்லது அமைப்புக்கள் அச்சம் காரணமாக வாய்மூடி மௌனம் சாதிக்க வேண்டிய நிலையே ஏற்படும்.

    இந்த இணையத்தளத்தில் இதுவரை வெளிவந்த செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்ன மாதிரயானவை என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

    Post Views: 922

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    இலங்கை பொருளாதார நெருக்கடி: கையளவு தூரத்தில் உணவு தட்டுப்பாடு – திவாலாகியதா தீவு நாடு?

    May 21, 2022

    மஹிந்தவுக்கு எதிரான பௌத்த மகாசங்கத்தின் அறிவிப்பு எதை உணர்த்துகிறது?

    May 6, 2022

    20 ஆவது அரசியலமைப்பு யாருக்காக? அது சாதித்தது என்ன?

    April 29, 2022

    Leave A Reply Cancel Reply

    August 2014
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    அங்கீகாரம் பெறும் இனப்படுகொலை

    May 22, 2022

    டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • அங்கீகாரம் பெறும் இனப்படுகொலை
    • டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    • பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version