பொலிவூட் சுப்பர் ஸ்டாரான சல்மான் கானுக்கு மும்பை நீதிமன்றமொன்றினால் 5 வருட கால சிறைத்தண்­டனை விதித்­துள்­ளது.

2002 ஆம் ஆண்டு மது­போ­தையில் வாக­னத்தைச் செலுத்திச் சென்று, வீதி­யோ­ரத்தில் உறங்கிக் கொண்டி­ருந்­தவர்கள் மீது மோதி­விட்டு தப்பிச் சென்ற குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்­கி­லேயே நேற்று இத்­தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

இவ்­வ­ழக்கில் சல்மான் கான் மேன்­மு­றை­யீடு செய்வார் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் அவ­ருக்கு மும்பை மேல் நீதிமன்றத்தால் இரு நாட்கள் இடைக்­கால பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

49 வய­தான சல்மான் கான், பொலிவூட் திரை­யு­லகில் அதிக வசூல் குவிக்கும் முன்­னிலை நடி­கர்­களில் ஒரு­வ­ராக விளங்­கு­கிறார்.

இந்­நி­லையில் அவ­ருக்கு சிறைத்­தண்­டனை விதித்து அளிக்­கப்­பட்ட தீர்ப்­பா­னது பொலிவூட் திரையுலகிலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2002 செப்­டெம்பர் 28 ஆம் திகதி மும்­பையில் விருந்­தொன்றில் கலந்­து­கொண்ட பின்னர், சல்மான் கான் பயணம் செய்த வாகனம் மும்பை பாந்த்ரா பகு­தி­யி­லுள்ள பேக்­க­ரி­யொன்­றுக்கு அருகில் வீதி­யோ­ரத்தில் உறங்கிக் கொண்­டி­ருந்­த­வர்கள் பலர் மீது ஏறி­யது.

இதனால் வீதியில் உறங்கிக் கொண்­டி­ருந்த ஒருவர் கொல்­லப்­பட்­ட­துடன் மேலும் நால்வர் காய­ம­டைந்­தனர்.

நூருல்லா மெஹ்பூப் ஷெரீப் என்­ப­வரே உயி­ரி­ழந்­தா­கவும் கலீம் மொஹமட் பதான், முன்னா மலை கான், அப்­துல்லா ரவூப் ஷேக், முஜ்லிம் ஷேக் ஆகியோர் காய­ம­டைந்­தனர் எனவும் தெரி­வித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்­தனர்.

இது தொடர்­பாக வழக்கு நீண்­ட­கா­ல­மாக இழு­பட்­டது.

விருந்து நிகழ்வில் சல்மான் கான் மது­பானம் அருந்­தி­விட்டு போதையில் வாகனம் செலுத்­தி­யதால் இந்த அனர்த்தம் ஏற்­பட்­ட­தாக பொலிஸார் கூறினர்.

அதே­வேளை, இவ்­வி­பத்தின் பின்னர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வாமல் சல்மான் கான் தப்பிச் சென்ற­தா­கவும் கூறப்­பட்­டது.

ஆனால், சல்மான் கான் இக்­குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தி­ருந்தார். சல்மான் கான் மது­பானம் அருந்தியி­ருக்­க­வில்லை தண்­ணீ­ரையே அருந்­தினார் என அவரின் வழக்­கு­ரை­ஞர்கள் வாதா­டினர்.

மேற்­படி விபத்­தின்­போது தான் வாக­னத்தை செலுத்­தவே இல்லை எனவும் தனது சார­தி­யான அஷோக் சிங் என்­ப­வரே இவ்­வா­க­னத்தை செலுத்­தி­வந்­த­தா­கவும் சல்மான் கான் கூறினார்.

ஆனால், இவ்­வி­பத்தின் பின்னர் சாட்­சி­ய­ம­ளித்த பலர், சல்மான் கானே வாக­னத்தை செலுத்தி வந்­த­தாக தெரி­வித்­தனர்.

கடந்த மார்ச் மாதம் இவ்­வழக்கில் சல்மான் கான் நேர­டி­ யாக நீதி­மன்றில் ஆஜ­ராகி வாக்­கு­ மூலம் அளித்த வேளை­யிலும் தான் வாகனத்தை செலுத்­த­வில்லை எனக் கூறினார்.

சல்மான் கானின் சார­தி­யான அஷோக் சிங், நீதி­மன்றில் வாக்­கு­மூலம் அளிக்­கையில், சல்மான் கான் வாக­னத்தை செலுத்­த­வில்லை எனவும் தானே அதை செலுத்­தி­ய­தா­கவும் கூறினார்.

விபத்தின் பின்னர் சல்மான் கான் தப்­பி­யோ­ட­வில்லை எனவும் வாக­னத்­தி­லி­ருந்து இறங்கி பாதிக்கப்பட்­ட­வர்­க­ளுக்கு உத­வினார் எனவும் அவர் தெரி­வித்தார்.

ஆனால், இதை மறுத்த அரச வழக்­கு­ரை­ஞர்கள், இவ்­வ­ளவு காலமும் அஷோக் சிங் ஏன்­குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொள்­ள­வில்லை என கேள்வி எழுப்­பினர்.

வாக­னத்தில் சார­தியின் ஆச­னப்­பக்­க­மா­க­வுள்ள கத­வுக்­கூ­டாக சல்மான் கான் இறங்­கு­வதை சாட்­சிகள் கண்­ட­தாக அரச வழக்­கு­ரை­ஞர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

சல்மான் கான் அமர்ந்­தி­ருந்த பயணி ஆசனப் பக்­க­மா­க­வுள்ள கதவு விபத்­தினால் இறு­கிக்­கொண்­டதால் அதை திறக்க முடி­யாத நிலை­யி­லேயே சார­தியின் ஆச­னப்­பக்­க­மாக சல்மான் இறங்­கினார் என அஷோக் சிங் தெரி­வித்தார்.

இக்­கூற்றை அரச வழக்­கு­ரை­ஞர்கள் ஏற்க மறுத்­தனர். வாக­னத்­தி­லி­ருந்த கோளாறு ஒன்றே இவ்­விபத்துக்கு கார­ண­மா­கியது எனக் கூறப்­பட்­ட­தையும் அரச வழக்­கு­ரை­ஞர்கள் நிரா­க­ரித்­தனர்.

இத்­த­கைய கோளாறு இருந்­தி­ருந்தால் அந்த ஆடம்­பர வாக­னத்தின் சமிக்­ஞைகள் மூலம் கண்டறியப்பட்­டி­ருக்கும் என அவர்­கள்­ கூ­றினர்.

இவ்­வா­க­னத்தின் பின் ஆச­னத்தில் பயணம் செய்த பொலிஸ் மெய்க்­கா­வ­ல­ரான ரவீந்­திர பட்டேல் முக்­கிய சாட்­சி­களில் ஒரு­வ­ராக விளங்­கினார்.

சல்மான் கான் போதை­யுடன் இருந்­த­தா­கவும் மணித்­தி­யா­லத்­துக்கு 95 கிலோ­மீற்றர் வேகத்தில் அவர் வாக­னத்தை செலுத்திச் சென்­ற­தா­கவும் அப்­பொலிஸ் உத்­தியோ­கஸ்தர் கூறினார்.

இவ்­வ­ழக்கு விசா­ரணை  நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த காலத்தில் அவர் கால­மானார். அதனால் அவரை குறுக்கு விசா­ரணை செய்ய முடி­யா­தென்­பதால் அவரின் சாட்­சி­யத்தை கருத்­திற்­கொள்­ளக்­கூ­டாது என சல்மான் கானின் வழக்­கு­ரை­ஞர்கள் வாதா­டினர்.

அதே­வேளை மேற்­படி சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­தவரின் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, அவரின் உடலில் விபத்தின் கார­ண­மாக காயம் ஏற்­பட்­டி­ருந்­த­தா­கவும்….

சல்­மானின் வாக­னத்தை தூக்­கு­வ­தற்கு, பாரம் தூக்கி (கிரேன்) ஒன்றை பொலிஸார் அழைப்­பித்­தபின், சல்­மானின் வாக­னத்தை கிரே­னினால் ஒரே தட­வையில் தூக்க முடி­யாமல் அவ்­வா­கனம் வீழ்த்­தப்­பட்ட வேளை­யி­லேயே மேற்படி நபர் நசுங்கி உயி­ரி­ழந்தார் எனவும் சல்­மானின் வழக்­கு­ரை­ஞர்கள் வாதா­டினர்.

எவ்­வா­றெ­னினும் சல்மான் கான் தரப்பு வாதங்கள் பல­வற்றை மும்பை நீதி­மன்றம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. சல்மான் கானே மேற்படி வாகனத்தை செலுத்தியதாக நீதிபதி டி.டபிள்யூ.தேஷ்பாண்டே கூறினார்.

இவ்வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பபட்டது.

மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு 10 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தீர்ப்பு தொடர்பாக சல்மான் கான் மேன்முறையீடு செய்யவுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகள் மும்பை மேல் நீதிமன்றத்தில் கோரினர்.

அதையடுத்து சல்மான்கானுக்கு மும்பை மேல் நீதிமன்றம் இரு நாட்கள் இடைக்கால பிணை வழங்கியுள்ளது. இப்பிணை மனு தொடர்பான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.


>
சல்மான் கானுக்கு எதிராக சாட்சியமளித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பரிதாப இறப்பு

08-05-2015

சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியமை குறித்து அவருடன் பாதுகாப்பிற்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தான் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

கடைசிவரை தனது முறைப்பாடு குறித்து திடமான மனதுடன் இருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் காசநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சல்மான் கானுக்கு மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ரவீந்திர பாட்டீல் எனும் பொலிஸ் கான்ஸ்டபிளை சல்மான் கானுக்கு பாதுகாப்பிற்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிக மது குடித்து விட்டு காரைத் தானே ஓட்டியுள்ளார் சல்மான் கான்.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுமாறு கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார்.

இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் காரணமாக அவர் பல மிரட்டல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ளார்.

நீதிமன்றத்திலும் துணிச்சலாக சல்மான் கானுக்கு எதிராக சாட்சியமளித்துள்ளார்.

இதனால் அவருக்கு பல தரப்பிலும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியைத் தாங்க முடியாமல் அவர் தலைமறைவானதாக அப்போது கூறப்பட்டது.

அதன்பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பொலிஸ் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.

அதன்பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பாட்டீல், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 ஒக்டோபர் மாதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான்.

அவர் கூறும்போது, இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய பொலிஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை.

எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை பொலிஸ் ஆணையாளரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்,’ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version