நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் ஏற்கெனவே சிம்புவை வைத்து ‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கியவர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக அண்மையில் கிசுகிசுக்கள் வந்தன.
இந்த நிலையில் இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் நயன்தாராவைவிட ஒரு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் குறித்து இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தவர் முதலாவதாக சிம்புவுடன் காதல் வயப்பட்டார்.
இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர்.
ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.
இதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.
கோவிலில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது. இருவரும் பிரிந்தனர்.
காதல் தோல்விகளால் விரக்தியில் இருந்த நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.
ராய் லட்சுமி மடியில் சமர்த்தாக படுத்து பால் குடித்த புலி!