தந்தையைக் கொலை செய்வேன் எனக்கூறி சேர்ந்த 20 வயதுடைய யுவதியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று யாழ். பருத்தித்துறை, குடத்தனை மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (25) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியின் அத்தானுடைய நண்பரான சந்தேநபர், மேற்படி யுவதியை அச்சுறுத்தி நள்ளிரவு வேளையில் வன்புணர்வு கொண்டுள்ளார். உடலில் மாற்றங்கள் தென்பட்டதையடுத்து.
வைத்தியசாலைக்கு யுவதி சிகிச்சைபெறச் சென்ற சமயம் இது தொடர்பில் வீட்டுக்காரர்கள் அறிந்து கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற ஆசிரியருக்கு விளக்கமறியல்
25-06-2015
வரணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.
ஆசிரியர் தரம் 3, தரம் 4 மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பில் மாணவிகள் அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அதிபர் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆசிரியர் வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.