வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று (02) பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.