குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 14 மாத குழந்தை உடலின் சில உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு நாட்கள் உயிர்காக்கும் இயந்திரத்துடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் உடலுப்புகள் செயலிழந்து குழந்தை உயிரிழந்துவிட்டது என பி.டி.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் 24 வயதாகும் தந்தை மற்றும் 21 வயதாகும் தாய் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்.
சமீபத்தில் இவர்கள் பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, குழந்தையின் பெற்றோர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.