இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ஆப்பிரிக்கா. அங்கு கிராமப்புறங்களில் கூட வைரஸ் பரவிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்காவில் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக ஆப்பிரிக்கா ஆகிவிடலாம் என்ற அச்சமும் இருக்கிறது.