தென்மராட்சி- மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மீது வாள்வெட்டுக்குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்ரீதரன் பவானி (வயது-40) என்ற குடும்பப் பெண்ணே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முகத்தை கறுப்புத் துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளது. அதில் கை, கால் என உடம்பின் பல பாகங்களில் வெட்டப்பட்டதில் அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version