கிளிநொச்சி தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றையதினம்  திருமணவிழாவிற்கு சென்ற இளைஞன் ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

தர்மபுரம் கிழக்குப் பகுதியிலே நேற்றைய தினம் திருமண நிகழ்வு ஒன்றிற்காக தர்மபுரம் கட்டகாடு பகுதியில் இருந்து சென்ற இளைஞன் நேற்றைய தினம் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த இளைஞனை தேடியுள்ளனர்.

 

இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்றைய தினம் திருமண நிகழ்வு நடந்த வீட்டில் பாதுகாப்பற்ற கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p

Share.
Leave A Reply

Exit mobile version