கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (28) காலை ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரயில் கடவைக்கு அருகில் சென்று கொண்டிருந்த இரு சிறுமிகளில் ஒருவர் மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பியகம, ஹேகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version