இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நவீன மென்பொருள் தொழில்நுட்பத்துடன் வான்வெளி உயரம், தட்ப வெப்பநிலை, ஈரப்பதம் மிக எளிதாக கண்டறியக்கூடிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறார்கள்.
இதை அறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எவ்வித திட்டமிடல் எதுவும் இல்லாமல் இன்று திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவிகளைச் சந்தித்தார்.
மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததோடு, அவர்களுக்கு புத்தகங்களையும் பரிசளித்தார்.
வருகின்ற ஏழாம் தேதி அப்பள்ளியின் 10 மாணவிகளும் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.