சிறையில் உள்ள வேல் சத்திரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதி(23)யை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஏராளமான பெண்களை சினிமா ஆசை காட்டி ஆபாச படம் எடுத்ததாகவும், அதனை வேல் சத்திரியன் விடிய, விடிய இரவில் பார்த்து ரசித்து வந்ததும், மேலும் சில பெண்களை பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்து வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38), இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவரை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் நடத்திய அலுவலகத்தில் சோதனை செய்த போது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் இளம்பெண்களின் அரை நிர்வாண படங்கள் உள்பட பல படங்கள் இருந்தன.

மேலும் சத்ரியன் இளம்பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரப்பபை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் படம் நடிக்கும் ஆசையில் அங்கு வந்ததாகவும், அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் சுமார் ஒரு கோடி வரை வேல் சத்ரியன் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே ஆன்லைன் மற்றும் செல்போன்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறி வருகிறார்கள்.

அவர்களிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சிறையில் உள்ள வேல் சத்திரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதி(23)யை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஏராளமான பெண்களை சினிமா ஆசை காட்டி ஆபாச படம் எடுத்ததாகவும், அதனை வேல் சத்திரியன் விடிய, விடிய இரவில் பார்த்து ரசித்து வந்ததும், மேலும் சில பெண்களை பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

300-க்கு மேற்பட்ட பெண்களிடம் விவரங்களை வாங்கி சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் வசூல் செய்ததையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து 3 நாட்கள் காவல் முடிந்ததை அடுத்து ஜெயஜோதியை இன்று போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் அவரை மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர்.

இதற்கிடையே வேல் சத்ரியனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. இயக்குனர் வேல் சத்ரியன்

 

Share.
Leave A Reply