மாத்தறை , கம்புருபிட்டிய பிரதேசத்தில் அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.

அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்புருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தங்கை திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகக் கடமையாற்றுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான அண்ணன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version